மேஷ ராசிக்கு வீடு தேடி வரும் திடீர் அதிர்ஷ்டம்.. இந்த வாரம் அடிபொலிதான்
வார ராசி பலன்: புதிய நம்பிக்கை, எதிர்பார்ப்புகளுடன் இந்த வாரம் தொடங்கியுள்ளது. தடைபட்ட காரியங்கள் இந்த வாரத்திலாவது நடைபெறுமா என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரத்தில் மேஷ ராகிக்கு கிடைக்கக் கூடிய பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
நம் ராசி பலன்களுக்கு சனி, குரு, ராகு கேது மாறியான கிரகங்களின் அமைப்பு மட்டுமே முக்கியமல்ல. வருடாந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களை போலவே மாதந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களின் அமைப்பு முக்கியம். ஒவ்வொரு வாரமும் கிரக நிலைகளில் மாற்ற இருக்கும். ஆனி மாதத்தின் கடைசி மாதமாகும்.

அடுத்த வாரம் ஆடி மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் 7.7.2025 முதல் 13.7.2025 வரையிலான காலகட்டத்தில் 12 ராசிகளுக்குமான வார ராசி பலன்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்தக் கட்டுரையில் மேஷ ராசிக்கான பலன்களை காணலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த வாரம் உத்யோகம், தொழில் நன்றாக இருக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகி நற்பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வீடு தேடி வரும். உத்யோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்ம் காணப்படும். வண்டி, வாகனத்தால் அனுகூலம் கிடைக்கும்.
பண வரவு
பண வரவு திருப்தியாக இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு கிடைக்கும். முதலீடுகளில் லாபம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் ஆதரவு இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் கைக்கொடுக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
குடும்பம்
வாழ்க்கை துணை, குழந்தைகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இந்த வாரத்தில் கோபம் அதிகளவு வரும். அதனால் எதிலும் பொறுமை அவசியம். வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானத்துடன் செயல்படுவது பல பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.
கவனம்
பணிச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும். வாக்கு கொடுக்கும் போது யோசித்து செயல்படுங்கள். உங்களால் முடியாத விஷயத்தை வாக்குறுதி அளிக்க வேண்டாம். ஓய்வு மிகவும் அவசியம். சனி பகவான் இருப்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கழுத்து, முதுகு, காது, மூக்கு தொண்டை பகுதிகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்
குடும்ப உறவுகளால் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் உள்ள முருகர் கோயில் சென்று வழிபடுவதாலும், தினசரி கந்த சஷ்டி கவனம் உச்சரிப்பதாலும் பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.












Click it and Unblock the Notifications