மகர ராசிக்கு டாப் கிளாஸ் மாற்றம்.. இனி அடிக்கிறதெல்லாம் ஜாக்பாட் தான்.. செப்டம்பர் வரை கவனம்
தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. மகர ராசிக்காரர்களுக்கு 4 முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசி இரண்டே விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். வாக்கு கொடுப்பது, தான் யார் தெரியுமா என்ற பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 3 ஆம் இடத்தில் சனி, ராகு, சுக்கிரன், புதன் அமர்ந்துள்ளது. இளைய சகோதரன், சகோதரிகள் மூலமாக நிறைய பிரச்சனைகள், வாக்குவாதங்கள், சண்டைகள், பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

மனதில் சண்டை போடும் எண்ணத்தை அதிகரிக்கும். நாம் அமைதியாக இருந்தாலும் இளைய சகோதரி, சகோதரர்கள், மாமனாரால் சண்டை வருவதற்கான வாய்ப்புள்ளது. வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மே 20 வரைக்கும் தான் இந்த நிலைமை இருக்கும். மே 20 ஆம் தேதிக்குப் பிறகு உங்களுக்கு பொற்காலம் உண்டாகும்.
2 ஆம் இடத்துக்கு ராகு வருவதால் குரு பார்வையும் கிடைப்பதால் வெற்றி உண்டாகும். ராகுவால் பெரிய ஏற்றம் ஏற்படும். மகரத்துக்கு கடந்த ஒரு ஆண்டுகளில் நிறைய பேருக்கு திருமணம், குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கும். நிறைய சுப காரியங்களுக்கு சென்றிருப்பீர்கள்.
6 ஆம் இடத்தில் குரு அமருவதால் வயிறு சார்ந்த பிரச்சனை ஏற்படும். சில விஷயங்களில் கடனை அதிகப்படுத்தும். அதிக வட்டிக்கு வாங்கியிருக்கும் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் எல்லாவற்றையும் கட்டி முடிப்பீர்கள். 10 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் அமோகமான காலகட்டமாக இருக்கும்.
3 ஆம் இடம், 6 ஆம் இடம் இணைவதால் மனதளவில் சில பிரச்சனைகள் ஏற்படும் . படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் இரண்டாம் முறை ஜெயிக்கும் நிலை உண்டாகும். சமசப்தமத்தில் கேது அமர்ந்துள்ளது. சூரியன், கேது இணைவதால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெரியவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வது நல்லது.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு உங்களுக்கு பெரிய ஏற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். நினைத்தது நடக்கும். தொழிலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். பணம் பொருளாதாரத்தில் நல்ல மேன்மை உண்டாகும்.
சுப்பிரமணிய சுவாமியை வழிபாடு செய்வது நல்லது. மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். மே மாதம் வரை மனதில் சில தவறான எண்ணங்கள் ஏற்படும். அதில் கவனம் தேவை. தினந்தோறும் தியானம் செய்வது, கோயிலுக்குச் செல்வது நல்லது. சந்தோஷத்தின் அடிப்படையில் 70 சதவீதமும், பொருளாதாரத்தின் அடிப்படையில் 90 சதவீத நற்பலன்களும் கிடைக்கும்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications