மகர ராசிக்கு டாப் கிளாஸ் மாற்றம்.. இனி அடிக்கிறதெல்லாம் ஜாக்பாட் தான்.. செப்டம்பர் வரை கவனம்
தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. மகர ராசிக்காரர்களுக்கு 4 முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசி இரண்டே விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். வாக்கு கொடுப்பது, தான் யார் தெரியுமா என்ற பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 3 ஆம் இடத்தில் சனி, ராகு, சுக்கிரன், புதன் அமர்ந்துள்ளது. இளைய சகோதரன், சகோதரிகள் மூலமாக நிறைய பிரச்சனைகள், வாக்குவாதங்கள், சண்டைகள், பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

மனதில் சண்டை போடும் எண்ணத்தை அதிகரிக்கும். நாம் அமைதியாக இருந்தாலும் இளைய சகோதரி, சகோதரர்கள், மாமனாரால் சண்டை வருவதற்கான வாய்ப்புள்ளது. வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மே 20 வரைக்கும் தான் இந்த நிலைமை இருக்கும். மே 20 ஆம் தேதிக்குப் பிறகு உங்களுக்கு பொற்காலம் உண்டாகும்.
2 ஆம் இடத்துக்கு ராகு வருவதால் குரு பார்வையும் கிடைப்பதால் வெற்றி உண்டாகும். ராகுவால் பெரிய ஏற்றம் ஏற்படும். மகரத்துக்கு கடந்த ஒரு ஆண்டுகளில் நிறைய பேருக்கு திருமணம், குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கும். நிறைய சுப காரியங்களுக்கு சென்றிருப்பீர்கள்.
6 ஆம் இடத்தில் குரு அமருவதால் வயிறு சார்ந்த பிரச்சனை ஏற்படும். சில விஷயங்களில் கடனை அதிகப்படுத்தும். அதிக வட்டிக்கு வாங்கியிருக்கும் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் எல்லாவற்றையும் கட்டி முடிப்பீர்கள். 10 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் அமோகமான காலகட்டமாக இருக்கும்.
3 ஆம் இடம், 6 ஆம் இடம் இணைவதால் மனதளவில் சில பிரச்சனைகள் ஏற்படும் . படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் இரண்டாம் முறை ஜெயிக்கும் நிலை உண்டாகும். சமசப்தமத்தில் கேது அமர்ந்துள்ளது. சூரியன், கேது இணைவதால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெரியவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வது நல்லது.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு உங்களுக்கு பெரிய ஏற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். நினைத்தது நடக்கும். தொழிலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். பணம் பொருளாதாரத்தில் நல்ல மேன்மை உண்டாகும்.
சுப்பிரமணிய சுவாமியை வழிபாடு செய்வது நல்லது. மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். மே மாதம் வரை மனதில் சில தவறான எண்ணங்கள் ஏற்படும். அதில் கவனம் தேவை. தினந்தோறும் தியானம் செய்வது, கோயிலுக்குச் செல்வது நல்லது. சந்தோஷத்தின் அடிப்படையில் 70 சதவீதமும், பொருளாதாரத்தின் அடிப்படையில் 90 சதவீத நற்பலன்களும் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications