சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர்
சென்னை: சென்னைவாசிகளின் நீண்ட நாள் கனவான அண்ணா சாலை உயர்மட்ட மேம்பாலப் பணியில் ஒரு முக்கியமான மைல்கல் எட்டப்பட்டிருக்கிறது. 'எப்ப முடியும்?' என ஏங்கித் தவித்த வாகன ஓட்டிகளுக்கு இதமான செய்தியாக, சைதாப்பேட்டை முதல் சி.ஐ.டி நகர் வரையிலான 1.5 கி.மீ நீளப் பகுதி தற்போது உருவம் பெற்றுள்ளது.
சுமார் 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3.2 கி.மீ தொலைவுக்கு அமையவுள்ள இந்த பிரம்மாண்ட பாலம், சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மீதம் உள்ள பணிகள் முடியாத காரணத்தால்.. இப்போதைக்கு பாலத்தை பயன்படுத்த முடியாது.

வேகமெடுக்கும் பணிகள்: மும்பை டூ சென்னை!
இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 91 தூண்கள் (Piers) அமைக்கப்பட வேண்டும். அதில் 50-க்கும் மேற்பட்ட தூண்கள் நட்டு முடிக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக, மும்பை மற்றும் குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ப்ரீ-ஃபேப்ரிகேட்டட் ஸ்பேன்கள் (Pre-fabricated spans) பொருத்தப்பட்டு, பாலம் தன் முழு வடிவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.
சைதாப்பேட்டையில் இருந்து 80 மீட்டர் தூரத்திற்குத் தார்ச் சாலை அணுகுமுறைப் பாதை (Approach road) அமைக்கப்பட்டு, அங்கிருந்து சி.ஐ.டி நகர் வரை கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
மெட்ரோவின் பலம்: 1,000 டன் தாங்கும் சக்தி!
இந்தத் திட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான தொழில்நுட்பக் கூட்டணி அரங்கேறியுள்ளது. மேம்பாலத்தின் 91 தூண்களில் சுமார் 69 தூண்கள் மெட்ரோ ரயில் பாதைக்கு நேர் மேலாக அமையவுள்ளன.
"மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே இதற்கான அடித்தளத்தை (Foundation) அமைத்து, நெடுஞ்சாலைத் துறை பாலத்தைத் தாங்குவதற்கான சப்போர்ட் கட்டமைப்புகளை வழங்கியுள்ளது. மெட்ரோவின் இந்த அடித்தளம் சுமார் 1,000 டன் எடையைத் தாங்கும் வல்லமை கொண்டது" என்கிறார் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர்.
பணிகளை விரைவுபடுத்த மேற்கு வங்கத்திலிருந்து கூடுதலாக 300 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, தற்போது மொத்தம் 600 பேர் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
நந்தனம் டூ தேனாம்பேட்டை: காத்திருக்கும் சவால்!
ஒரு பக்கம் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்தாலும், நந்தனம் முதல் தேனாம்பேட்டை வரையிலான அடுத்த பகுதியில் இன்னும் சவால்கள் நீடிக்கின்றன. அங்கு இப்போதுதான் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
மின்சாரத் தடை: 230kV நிலத்தடி மின்சார கேபிள்களை மாற்றும் பணி தாமதமானதே இதற்குக் காரணம்.
காலக்கெடு: இப்பகுதியில் பாலம் கட்டப்படுவதற்கு இன்னும் 4 மாதங்களாவது ஆகும் என்கிறார்கள் அதிகாரிகள்.
போக்குவரத்து மாற்றம்: தற்போது தேனாம்பேட்டை, செனோடாப் சாலை மற்றும் தி.நகர் தியாகராய சாலை வழியாகப் பேருந்துகள் திருப்பி விடப்படுவது கடும் போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதாகப் பொதுமக்கள் குமுறுகின்றனர்.
"தி.நகர் பகுதியில் மாலை நேரங்களில் நெரிசல் உச்சத்தில் இருக்கிறது. குறுகிய சாலைகளில் பேருந்துகளும் லாரிகளும் செல்வதால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள். நந்தனம் பகுதிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்" என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
தற்போது சைதாப்பேட்டை - சி.ஐ.டி நகர் பகுதியில் தடுப்புகள் (Barricades) அகற்றப்பட்டு, ஜோன்ஸ் சாலை சந்திப்பு அருகே 'யூ-டர்ன்' வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது அந்தப் பகுதியில் ஓரளவுக்கு நெரிசலைக் குறைத்துள்ளது. முழுப் பாலமும் பயன்பாட்டுக்கு வரும்போது, அண்ணா சாலை 'சிக்னல் இல்லாத' சாலையாக மாறும் என்பது மட்டும் நிச்சயம்!
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications