டிரைவிங் லைசென்ஸ் வயது வரம்பு மாற்றம்! ஆன்லைன் சேவைகள், RTO அலைச்சல் முடிவுக்கு வருகிறது- புது ரூல்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவு சேவைகளில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்களை கொண்டு வர தயாராகி வருகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) இந்த மாற்றங்களை விரைவில் செயல்படுத்த உள்ளது.
தற்போதைய விதிகளின்படி, புதிய ஓட்டுநர் உரிமம் பெறும்போது அது பொதுவாக 20 ஆண்டுகள் அல்லது ஓட்டுநருக்கு 40 வயது நிறைவடையும் வரை செல்லுபடியாகும். அதன்பின் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த முறைமை பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. ஆனால் புதிய முன்மொழிவின்படி, ஓட்டுநர் உரிமம் பெற்றவருக்கு 50 வயது வரை தடையின்றி செல்லுபடியாகும். இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், பல லட்சம் மக்கள் மீண்டும் மீண்டும் RTO அலுவலகங்களுக்கு செல்லும் அவசியம் தவிர்க்கப்படும்.

இந்த அதிரடி மாற்றத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதும், தேவையற்ற ஆவண அலைச்சலை குறைப்பதும்தான். "பொதுச் சேவைகளை எளிமையாக்குவதே நோக்கம்" என போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசின் 'Ease of Living' கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும்.
மேலும், வாகன உரிமையாளர் பெயர் மாற்றம் (Vehicle Ownership Transfer), பெர்மிட் புதுப்பிப்பு (Permit Renewal) உள்ளிட்ட முக்கிய சேவைகள் முழுக்க முழுக்க ஆன்லைன் மயமாக்கப்பட உள்ளன. தற்போது பழைய வாகனத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது RTO அலுவலகத்துக்கு பல முறை செல்ல வேண்டிய நிலை உள்ளது. புதிய திட்டம் அமலுக்கு வந்தால் இந்த அலைச்சல் முற்றிலும் ஒழியும். வீட்டில் இருந்தபடியே மொபைல் அல்லது கம்ப்யூட்டர் மூலம் அனைத்து பணிகளையும் முடிக்கலாம்.
இந்த டிஜிட்டல் மாற்றம் RTO அலுவலகங்களில் நிலவும் இடைத்தரகர்கள் மற்றும் ஊழல் புகார்களுக்கு பெரும் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு அதிகாரிகள் தெளிவான பதில் அளித்துள்ளனர். "புதிய உரிமம் வாங்குவது, புதுப்பிப்பது உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் ஆன்லைன் மூலமே வசூலிக்கப்படும். எனவே வருவாய் பாதிக்கப்படாது" என அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சீர்திருத்தங்கள் சாதாரண மக்களுக்கு பெரும் சலுகையாக இருந்தாலும், விதிமீறல் ஓட்டுநர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளும் தயாராகி வருகின்றன. நெகட்டிவ் பாயிண்ட்ஸ் (Negative Points) அமைப்பு கொண்டு வரப்பட உள்ளது. விதிகளை மீறும் ஒவ்வொரு முறையும் புள்ளிகள் குறைக்கப்படும். குறிப்பிட்ட புள்ளிகளை தாண்டினால் லைசென்ஸ் தற்காலிகமாக முடக்கப்படும் அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இது ஆபத்தான ஓட்டுதலை கட்டுப்படுத்த உதவும்.
மத்திய அரசின் இந்த டிஜிட்டல் புரட்சி நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளின் வாழ்க்கையை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. RTO அலுவலகங்களில் நீண்ட வரிசை, தேவையற்ற காத்திருப்பு, மீண்டும் மீண்டும் ஆவணங்கள் சமர்ப்பித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால் இந்தியாவில் போக்குவரத்து துறை நிர்வாகம் முழுமையாக டிஜிட்டல் யுகத்துக்கு செல்லும்.
இந்த சீர்திருத்தங்கள் இளம் ஓட்டுநர்கள் முதல் வயதான ஓட்டுநர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும். குறிப்பாக பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமையும். மத்திய அரசின் இந்த முயற்சி 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'எளிதான வாழ்க்கை' நோக்கங்களை நனவாக்கும் முக்கிய அடியாக பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications