வரி கம்மின்னு EV வண்டி வாங்க நினைச்சவங்களுக்கு ஷாக்! ஜிஎஸ்டி வரியை தடாலடியாக உயர்த்த திட்டம்
டெல்லி: நாட்டில் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்கள் (EV) (இவி) வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி வெறும் 5% ஆக உள்ள நிலையில் பயன்படுத்தப்பட்ட இவிகள் மீதான இந்த அதீதமான வரி விதிப்பு வாகனங்கள் மறுவிற்பனை துறையை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டிசம்பர் 20, 21-ந் தேதிதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த கூட்டத்தில் நடைமுறையில் உள்ள வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் பழைய மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியில் அதிரடியான மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதியதாக வாங்கப்படும் மின்சார வாகனங்களுக்கு தற்போது வெறும் 5%தான் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் மின்சார வாகனங்களை வாங்குவதில் பொதுமக்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மின்சார வாகன உற்பத்தி துறையும் பெருமளவு வளர்ச்சி கண்டு வருகிறது.
ஆனால் பழைய மின்சார வாகனங்கள்- பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த 12% ஜிஎஸ்டி வரியை 6% கூடுதலாக அதாவது 18% ஆக உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாகனங்களின் மறுவிற்பனை என்பது மிக மோசமான பாதிப்பை சந்திக்கக் கூடும் என எச்சரிக்கப்படுகிறது. பொதுவாக பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறயில் இருந்து வருகிறது. அதே வரிவிதிப்பை பழைய மின்சார வாகனங்களுக்கும் விதிக்கப்படுகிற நிலையில், ஒட்டுமொத்தமாக ரீ சேல் எனப்படுகிற மறுவிற்பனை துறையில் ஈடுபட்டிருப்போர் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.
காப்பீட்டுத் திட்டங்கள் வரி குறைப்பு?: இதேபோல ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தவணை தொகை மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது அல்லது வரிவிதிப்பையே கைவிடுவது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தவணை தொகை மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது ரூ5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டு தவணை தொகைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது; இதற்கு மேலான காப்பீட்டு தவணை தொகைக்கு 18% வரி விதிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 20,21-ல் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுப்போம் என தெரிவித்திருந்தார். இது நடைமுறைக்கு வரும் போது பாலிசிதாரர்களுக்கான காப்பீட்டு தவணை தொகை குறையும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications