வரி கம்மின்னு EV வண்டி வாங்க நினைச்சவங்களுக்கு ஷாக்! ஜிஎஸ்டி வரியை தடாலடியாக உயர்த்த திட்டம்
டெல்லி: நாட்டில் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்கள் (EV) (இவி) வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி வெறும் 5% ஆக உள்ள நிலையில் பயன்படுத்தப்பட்ட இவிகள் மீதான இந்த அதீதமான வரி விதிப்பு வாகனங்கள் மறுவிற்பனை துறையை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டிசம்பர் 20, 21-ந் தேதிதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த கூட்டத்தில் நடைமுறையில் உள்ள வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் பழைய மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியில் அதிரடியான மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதியதாக வாங்கப்படும் மின்சார வாகனங்களுக்கு தற்போது வெறும் 5%தான் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் மின்சார வாகனங்களை வாங்குவதில் பொதுமக்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மின்சார வாகன உற்பத்தி துறையும் பெருமளவு வளர்ச்சி கண்டு வருகிறது.
ஆனால் பழைய மின்சார வாகனங்கள்- பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த 12% ஜிஎஸ்டி வரியை 6% கூடுதலாக அதாவது 18% ஆக உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாகனங்களின் மறுவிற்பனை என்பது மிக மோசமான பாதிப்பை சந்திக்கக் கூடும் என எச்சரிக்கப்படுகிறது. பொதுவாக பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறயில் இருந்து வருகிறது. அதே வரிவிதிப்பை பழைய மின்சார வாகனங்களுக்கும் விதிக்கப்படுகிற நிலையில், ஒட்டுமொத்தமாக ரீ சேல் எனப்படுகிற மறுவிற்பனை துறையில் ஈடுபட்டிருப்போர் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.
காப்பீட்டுத் திட்டங்கள் வரி குறைப்பு?: இதேபோல ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தவணை தொகை மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது அல்லது வரிவிதிப்பையே கைவிடுவது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தவணை தொகை மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது ரூ5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டு தவணை தொகைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது; இதற்கு மேலான காப்பீட்டு தவணை தொகைக்கு 18% வரி விதிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 20,21-ல் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுப்போம் என தெரிவித்திருந்தார். இது நடைமுறைக்கு வரும் போது பாலிசிதாரர்களுக்கான காப்பீட்டு தவணை தொகை குறையும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications