கொங்கு டூ தென் மண்டலம்.. வருகிறது பிரம்மாண்ட 4 வழிச்சாலை.. 95% பணிகள் ஓவர்.. எப்போது திறக்கப்படும்?
சென்னை: பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான நான்கு வழிச்சாலை பணிகள் 95% நிறைவடைந்துள்ள நிலையில், இந்தச் சாலை டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால் எந்த தாமதமும் ஏற்படாத பட்சத்தில், எஞ்சிய பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
முக்கிய பாலங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆச்சிபட்டி அருகே 2,166 மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான நான்கு வழிச்சாலை
தற்போது ஆச்சிபட்டி, புளியம்பட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் சாலைகளில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புளியம்பட்டி, ஊஞ்சவேலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுவர்கள் கட்டும் போன்ற இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
3,649 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் இந்த திட்டம், பொள்ளாச்சியையும் திண்டுக்கல் அருகே உள்ள கமலாபுரத்தையும் இணைக்கும். 131.96 கி.மீ நீளமுள்ள இந்த சாலை மடத்துக்குளம் மற்றும் ஒட்டன்சத்திரம் வழியாகச் செல்லும். இத்திட்டம், அப்பகுதியின் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதோடு, போக்குவரத்துக் குறைப்புக்கும் வழிவகுக்கும்.
பயண நேரம் கணிசமாக குறையும்
இந்த நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு வரும்போது, திண்டுக்கல், பொள்ளாச்சி மற்றும் கோவை இடையேயான பயண நேரமும் தூரமும் கணிசமாகக் குறையும். முக்கியமாக, பழனியிலிருந்து கோவைக்கோ அல்லது கோவையிலிருந்து பழனிக்கோ செல்லும் வாகன ஓட்டிகள் பொள்ளாச்சி நகரத்தின் வழியாகச் செல்ல வேண்டியதில்லை. இது நகரத்தின் நெரிசலான போக்குவரத்திலிருந்து பெரும் நிவாரணம் அளிக்கும்.
மொத்த தூரத்தில் கிட்டத்தட்ட 80% நகரங்களுக்குள் நுழையாமல் கனரக வாகனங்களை திசை திருப்பும் வகையில் புறவழிச்சாலையாக செயல்படும். இத்திட்டம் மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) செயல்படுத்துகிறது.
கனரக வாகனங்களை திசை திருப்பும்
வானிலை ஒத்துழைத்தால், சாலைப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று NHAI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மழைக்காலத்தில் அதிக மழை பெய்தால், பணி நிறைவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படலாம். கட்டுமானப் பணிகளின் இறுதிக் கட்டத்தை விரைவுபடுத்த ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தல், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல், மரங்களை அகற்றுதல் மற்றும் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திட்ட தாமதங்களால் பயணிகளுக்கு சிரமங்களும், எதிர்பார்த்த பொருளாதாரப் பலன்களும் குறைந்துள்ளதாகவும் கூறி, இத்திட்டத்தை விரைவுபடுத்துமாறு உள்ளூர் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.
தருமபுரி சாலைகள்
இன்னொரு பக்கம் தருமபுரியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வெளிவட்ட சாலை அமைக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.
தருமபுரி-திருப்பத்தூர் சாலை, கிருஷ்ணகிரி சாலை மற்றும் ஹரூர் சாலையை இணைக்கும் வகையில் தமிழக அரசு 2021ஆம் ஆண்டு இந்த திட்டத்தை முன்மொழிந்தது. மேலும், இது மொரப்பூர் சாலை, எட்டிமடத்துப்பட்டி சாலை, மிட்டாரெட்டிஹள்ளி சாலை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும். முன்மொழியப்பட்ட சாலையானது, மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை தவிர்த்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்லவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் உதவும்.
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் சுமார் 50,000 வணிக வாகனங்களும், 1.5 லட்சத்துக்கும் அதிகமான தனியார் வாகனங்களும் உள்ளன. இருப்பினும், சாலைகள் விரிவுபடுத்தப்படாததால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிலேயே இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ரூ.70 லட்சம் விடுவிக்கப்பட்டு அரசு சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது NHAI சார்பாக தர்மபுரியில் வெளிவட்ட சாலை அமைப்பதற்கான DPR வெளியிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தர்மபுரியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என NHAI அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications