சென்னையில் தொடங்கும்.. மிகப்பெரிய 6 வழிச்சாலை.. 142 கிமீ தூரத்திற்கு நடக்கும்.. அசத்தல் சம்பவம்!
சென்னை: சென்னை - வேலூர் இடையே புதிய ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை முன்னெடுத்துள்ளது. இச்சாலை முக்கிய தொழில் பகுதிகளை இணைக்கும். தாம்பரம் மற்றும் தென் சென்னையின் பிற பகுதிகளிலிருந்து ஆற்காடு, வேலூருக்கான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதிவாரியாக புதிய பசுமை வழித்தடமாக அமையவுள்ள இத்திட்டம், ஒரகடத்தின் தொழிற்பூங்கா, செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா, மற்றும் வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 38-ஐ ஒட்டி அமையவுள்ள சிப்காட் தொழிற்பூங்கா (இறுதி செய்யப்படாத இடம்) ஆகியவற்றை இணைக்கும்.

கத்திப்பள்ளி மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு சரக்கு போக்குவரத்துச் சுமையை குறைப்பதும், ஸ்ரீபெரும்புதூர் - வேலூர் இடையேயான சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நெரிசலைத் தணிப்பதும் இப்புதிய சாலையின் முக்கிய நோக்கமாகும்.
சென்னை - வேலூர் இடையே புதிய ஆறு வழிச்சாலை
சுமார் 135 கி.மீ முதல் 142 கி.மீ நீளமுள்ள இந்த ஆறு வழிச்சாலை, ஒரகடத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் சென்னை புறவெளி சுற்றுச் சாலையிலிருந்து தொடங்கி, செய்யார் சிப்காட் வழியாக வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 38-ல் முடிவடையும் என அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், ஒரகடத்தில் சென்னை புறவெளி சுற்றுச் சாலையிலிருந்து செய்யார் சிப்காட் அருகேயுள்ள மங்கல் கூட் சாலை வரையிலான 68 கி.மீ தூரப்பகுதி அடங்கும். ஒரகடத்திலிருந்து செய்யார் வரையிலான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இச்சாலை, முடக்கப்பட்ட சென்னை - சேலம் விரைவுச்சாலையின் ஒருபகுதியை ஒத்திருக்கும். செய்யார் சிப்காட்டிலிருந்து வேலூர் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூரை நோக்கியும், ஆற்காடு - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை மற்றும் சில சந்திப்புகள் வழியாகவும் இச்சாலை நீட்டிக்கப்படும்.
ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வருபவர்கள் செய்யார் சிப்காட் வழியாக ஆற்காடுக்கு நேரடியாகப் பயணிக்க இச்சாலை உதவும். இதன்மூலம் பயண நேரம் குறையும். ஒரகடத்தை ஒட்டியுள்ள செய்யார் தொழிற்தடத்தை வேலூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 38 வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைச் சமர்ப்பிக்க, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் டெண்டர் கோரியுள்ளது.
சென்னை - வேலூர் இடையே புதிய ஆறு வழிச்சாலை ரூட் என்ன?
இத்திட்டம் ஆரம்ப நிலையிலேயே உள்ளதால், இதன் தூரம் மற்றும் உண்மையான செலவு - பலன் விகிதம் சாத்தியக்கூறு ஆய்வு முடிந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "ஒரகடத்திலிருந்து செய்யார் சிப்காட் வரையிலான 68 கி.மீ புதிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓ.சி.ஐ.சி மேம்பாட்டிற்கான விரிவான அறிக்கை தயாராகியுள்ளது, இதில் தற்போதுள்ள மாநில நெடுஞ்சாலைகளை நான்கு மற்றும் ஆறு வழிச்சாலையாகத் தரம் உயர்த்துவதும் அடங்கும்" என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
எதிர்காலத்தில், செய்யார் சிப்காட் தொழில்துறை வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பகுதிகளுடன் இணைக்கப்படும். "வேலூரில் தேசிய நெடுஞ்சாலை 38-ல் தொழிற்தடங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார். இந்த ஆய்வில், செய்யார் சிப்காட்டிலிருந்து வேலூரை இணைக்கும் புதிய 74 கி.மீ நெடுஞ்சாலையை ஆற்காடு - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை 38-ல் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்படும்" என்றும் அவர் கூறினார்.
சென்னை 6 வழிச்சாலை
சென்னை புறவெளி சுற்றுச் சாலை எண்ணூர் துறைமுகத்திலிருந்து தொடங்கி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மகாபலிபுரம் அருகேயுள்ள பூஞ்சேரியில் முடிவடைகிறது. தற்போது, செய்யார் சிப்காட்டிலிருந்து கத்திப்பள்ளி துறைமுகத்திற்குச் செல்லும் சரக்கு வாகனங்கள் குறுகிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை புறவழிச் சாலை அல்லது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கின்றன.
அதேபோல, செங்கல்பட்டில் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெங்களூரு புறவழிச்சாலையை அடைய ஒரகடம்புறமாக 18 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. மாநில அரசு தற்போதுள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதா அல்லது செய்யாருக்கும் வேலூருக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 38-ஐ ஒட்டி புதிய பசுமை வழித்தடத்தை உருவாக்குவதா என்பதையும் ஆலோசகர் ஆய்வு செய்வார். தொழில்துறை வளர்ச்சி மூலம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் மாநில அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும் இந்த திட்டம் என அதிகாரபூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications