சென்னையில் வரும் பிரம்மாண்ட ரிங் ரோடு.. இப்பவே இந்த இடத்தில் நிலம் வாங்கினால்.. நீங்கதான் ராஜா!
சென்னை: சென்னை வெளி வட்டச் சாலைத் திட்டத்தின் (Chennai Peripheral Ring Road - CPRR) காரணமாக சென்னையில் பல இடங்களில் நிலத்தின் மதிப்பு சரமாரியாக உயரும் வாய்ப்புகள் உள்ளன.
சென்னை புறநகர் சுற்றுச்சாலைத் (CPRR) திட்டத்தால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வரும் முக்கிய பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

சிங்கப்பெருமாள் கோயில்:
தகவல் தொழில்நுட்பப் பெருவழிச்சாலை (GST சாலை) மற்றும் ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் வாகன உற்பத்தி மையத்திற்கு இடையே ஒரு இணைப்புப் பாலமாக இது செயல்படுகிறது. புதிய ரயில்வே மேம்பாலம் மற்றும் CPRR இணைப்பு இதற்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது. மனைப் பிரிவுகள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக இடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் Zoho போன்ற பெரிய நிறுவனங்கள் அருகிலேயே உள்ளன. இதனால் இங்கே நிலத்தின் மதிப்பு 30% வரை உயரும்.
ஸ்ரீபெரும்புதூர் & ஒரகடம்:
இது ஏற்கனவே ஒரு முக்கியமான தொழில்துறை/சிறப்பு பொருளாதார மண்டலமாக உள்ளது. புறநகர் சுற்றுச்சாலை சென்னை மற்றும் எண்ணூருக்கு நேரடி அணுகலை மேம்படுத்துகிறது. சராசரி குடியிருப்பு விலை ஒரு சதுர அடிக்கு சுமார் ₹2,800-₹2,850 ஆக உள்ளது. CPRR திட்டத்திற்குப் பிறகு இது வலுவான வளர்ச்சி potentialலைக் கொண்டுள்ளது. இதனால் இங்கே நிலத்தின் மதிப்பு 50% வரை உயரும்.
திருவள்ளூர் & வடக்கு தாழ்வாரம் (கடப்பாகம், தீயம்பாக்கம், மாதவரம் போன்றவை)
வடசென்னைக்கு CPRR, மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டம் மற்றும் ORR (Outer Ring Road) ஆகியவற்றின் மூலம் ஒரு பெரிய இணைப்பு கிடைக்கிறது. இது ஒரு புதிய வளர்ச்சி மையமாக உருவெடுத்துள்ளது. மாதவரம், பெரம்பூர், விடம்பாக்கம் போன்ற புறநகர்ப் பகுதிகளில் அடுத்த பத்து ஆண்டுகளில் வீட்டு மனைகளின் மதிப்பு சுமார் 15-20% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாபலிபுரம் / ECR
CPRR ஆனது நெரிசலான OMR/ECR சாலையைத் தவிர்த்து, சரக்கு மற்றும் போக்குவரத்துக்கான வேகமான வழியை உருவாக்குகிறது. இதனால் மகாபலிபுரம் போன்ற கடலோர நகரங்கள் முதலீட்டிற்கு ஏற்றதாக மாறுகின்றன. டெவலப்பர்களிடம் இருந்து அதிக ஆர்வம், சர்வதேச நிதி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த நில மதிப்பு உயர்வு காணப்படுகிறது. இதனால் இங்கே நிலத்தின் மதிப்பு 30% வரை உயரும்.
ஆவடி & திருமுல்லைவாயல் (ரயில் + சாலை பகுதிகள்)
இந்த சாலை காரணமாக ஆவடியில் நிலத்தின் மதிப்பு உயரும். ஆவடியில் தற்போது ஒரு சதுர அடிக்கு சுமார் ₹1,700-₹3,500 ஆக உள்ளது. போக்குவரத்து இணைப்பு மேம்படுவதால் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இங்கே நிலத்தின் மதிப்பு 40% வரை உயரும்.
(Chennai Peripheral Ring Road - CPRR
சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை வெளி வட்டச் சாலைத் திட்டத்தின் (Chennai Peripheral Ring Road - CPRR) மூன்றாம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலையின் ஒரு பகுதி ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வெளி வட்டச் சாலைத் திட்டம்
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எண்ணூர் துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும் இந்தச் சாலைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் மூலம் எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரை 132.87 கி.மீ தூரத்திற்கு பல்வேறு கட்டங்களாக இந்தச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
திட்டத்தின் காலக்கெடு
இந்த விரைவுச் சாலை கட்டுமானத்திற்கு 2025-ஆம் ஆண்டு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமானத்தில் உள்ள பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை மற்றும் சித்தூர் - தச்சூர் விரைவுச் சாலை திட்டங்களுடன் இணைக்கப்படும். இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது.
மூன்றாம் கட்டப் பணிகள்
சென்னை வெளி வட்டச் சாலைத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளை திருவள்ளூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் வெங்கத்தூர் வரை 10.4 கி.மீ தூரத்திற்கும், வெங்கத்தூர் முதல் செங்காடு வரை 10 கி.மீ தூரத்திற்கும், செங்காடு முதல் திருப்பெரும்புதூர் வரை 9.7 கி.மீ தூரத்திற்கும் என மொத்தம் 30 கி.மீ தூரத்திற்கு ரூ.2689.74 கோடி செலவில் புதிய ஆறு வழிச் சாலை மற்றும் இருவழி சேவைச் சாலை அமைக்கப்பட உள்ளது. பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலைப்பணிகள் நிறைவுற்றால், தமிழ்நாட்டின் போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, தொழில்துறை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
நிலம் கையகப்படுத்தும் பணி
சென்னை வெளி வட்டச் சாலை கட்டுமானத்தில் சிங்கப்பெருமாள்கோயில் முதல் மாமல்லபுரம் வரையிலான ஐந்தாவது பிரிவுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானின் அரசு நிறுவனமான ஜைக்காவிடமிருந்து (JICA) இதற்காக ரூ.2,784 கோடி வெளிநாட்டு நிதி பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் (TNRDC) சென்னை சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து பூஞ்சேரி (மாமல்லபுரம் அருகே) வரையிலான சென்னை வெளி வட்டச் சாலை பிரிவு 5-க்கு நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய பணிகளைச் செய்ய ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது.
திட்டத்தின் விவரங்கள்
சென்னை வெளி வட்டச் சாலைத் திட்டத்தின் முக்கிய விவரங்கள்:
மொத்த மதிப்பிடப்பட்ட செலவு: ரூ. 12,301 கோடி
திட்டத்தின் நீளம்: 132.87 கி.மீ (தோராயமாக)
பாதைகள்: 10 வழி பாதைகள் (மெயின் சாலை 6 பாதைகள் + இருபுறமும் 2 சேவைப் பாதைகள்)
வடிவமைப்பு வேகம்: மணிக்கு 120 கி.மீ
தற்போதைய நிலை: எண்ணூர் - தச்சூர் பிரிவு கட்டுமானத்தில் உள்ளது
காலக்கெடு: 2025
உரிமையாளர்: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC)
திட்ட மாதிரி: பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC)
நிதி ஆதாரங்கள்: பிரிவு 1 (25.31 கி.மீ எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை): ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA, 40,074 மில்லியன் யென் கடன்)
டெண்டர் பணிகள்
எண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரம் இடையே 133 கி.மீ நீளமுள்ள சென்னை வெளி வட்டச் சாலையின் பெரும்பகுதி 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முக்கியமான சில இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வந்த நிலையில், அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கி.மீ தூரத்திற்கு இந்த சாலை கட்டப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications