லட்சுமி மேனனின் மோசமான நிலைமை? அறை கதவை திறக்க முடியாமல் தட்டு தடுமாறி! சுயநல வலையில் நடிகை பரிதாபம்
சென்னை: கடந்த செப்டம்பர் மாதம், பிரபல நடிகை லட்சுமி மேனன், எர்ணாகுளம் பானர்ஜி சாலையிலுள்ள வெலாசிட்டி பப்பில், ஐடி ஊழியர் ஒருவரை தாக்கியதாக புகார் கிளம்பியது.. நண்பர்களுடன் சேர்ந்து அவரை தாக்கி, கடத்தியதுடன் அராஜகத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்திருந்தன.. இந்நிலையில், லட்சுமி மேனன் குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் "மலேசியாவில் நடந்த ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பிற்கு லட்சுமி மேனன் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

காலை 9 மணி ஷூட்டிங் என்றால் அவர் மதியம் 1 மணிக்குதான் வந்துள்ளார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி அவரைப் படத்திலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக கயல் பட ஆனந்தியை ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது..
ராசியான நடிகை
லட்சுமி மேனனை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது லிங்குசாமிதான்.. 'கும்கி' தொடர்ந்து 'சுந்தரபாண்டியன்', 'பாண்டிய நாடு' என்று பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.
ஒருமுறை லிங்குசாமி மேடையில் பேசும்போது, "லட்சுமிமேனன் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்டாகிவிடுகிறது.. அதனால் அவர் ஒரு 'ராசியான நடிகை' என்று பேசியிருந்தார்.
அதற்கேற்றவாறு பல டைரக்டர்கள் கதை எழுதி முடித்ததுமே, ஹீரோயின் என்றாலே அது லட்சுமி மேனன் என்றுதான் முடிவு செய்தார்கள்..
லட்சுமி மேனன் ஒரு திறமையான நடிகை என்றாலும், சினிமாவில் சிலர் அவருடன் நட்பை வைத்து கொண்டு, வேறொரு திசையை நோக்கி நகர்த்திவிட்டார்கள்.. அதற்கு லட்சுமிமேனன் அடிமையாகிவிட்டார்.. இதனால் ஷூட்டிங்குக்கு சரியாக வரமுடியாத சூழல் ஏற்பட்டது.
சுயநல வலையில் சிக்கிய நடிகை
இந்த பழக்கம் மட்டும் அவருக்கு இல்லாமல் இருந்தால், இன்னும் பல வருட காலத்துக்கு சினிமாவில் முன்னணியில் இருந்திருக்க வேண்டிய நடிகை அவர்.. அழகு, நடிப்பு நிறைந்திருந்தாலும், சிலரது சுயநல வலைக்குள் விழுந்துவிட்டார்.. இதனால் இந்த சினிமா துறையும் அவரை மெல்ல மெல்லப் புறக்கணித்துவிட்டது..
இதனால் கேரளாவுக்கு சென்றுவிட்டார்.. அங்கு சில படங்கள் நடித்து கொண்டிருப்பதாக தெரிகிறது.. இப்போது நீண்ட காலம் கழித்து லிங்குசாமி படம் எடுக்கிறார்.. இதனால் ராசியான நடிகை என்பதால், மீண்டும் லட்சுமி மேனனை தமிழுக்கு அழைத்து வந்து வாய்ப்பு தந்துள்ளார்..அந்த படம் முழுக்க மலேசியாவில் நடப்பதால், மொத்த யூனிட்டையும் மலேசியாவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.. இதற்கு நிறைய செலவாகும்..
ரூம் கதவை திறக்க முடியாத லட்சுமி மேனன்
ஆனால், அங்கு சென்ற பிறகும் ஷூட்டிங்குக்கு லட்சுமி மேனன் வரவில்லை.. அறைக் கதவை திறக்க முடியாத அளவுக்கு மோசமான நிலைமையில் இருந்துள்ளார்.. அதுவரை பொறுத்து பொறுத்து பார்த்த லிங்குசாமி, நீங்க கிளம்புங்க என்று சொல்லிவிட்டாராம்.. அதற்கு பிறகுதான் கயல் ஆனந்தியை புக் செய்திருக்கிறார்கள்.
லட்சுமி மேனனுக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தாலும், ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து மீண்டு வருவது கடினம்.. அவருக்கு மிகவும் சின்ன வயது.. முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால், தன்னுடைய பழைய நிலைக்கு அவர் திரும்பலாம்.. எனினும் பரிதாபத்துக்குரிய இடத்தில்தான் லட்சுமி மேனனை நாம் பார்க்க வேண்டி உள்ளது" என்றெல்லாம் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications