Vaa Vaathiyaar Review: வா வாத்தியார் எப்படியிருக்கு? மெய்யழகனுக்கு பிறகு கார்த்திக்கு கம்பேக் படமா?
சென்னை: நடிகர் கார்த்தி நடித்த "வா வாத்தியார்" திரைப்படம் எப்படி இருக்கிறது தெரியுமா? அதில் எந்த காட்சி நன்றாக இருக்கிறது. எவை சரியில்லை என்பது குறித்து அலசுவோம். பொங்கல் பண்டிகையையொட்டி இன்றைய தினம் இந்த படம் வெளியாகியுள்ளது.
"சூது கவ்வும்" என்ற படத்தை இயக்கிய நளன் குமாரசாமிதான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், தேனப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் எனும் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எடிட்டர் வெற்றி கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஆவர்.
வா வாத்தியார் படம் பெரும் போராட்டத்திற்கு பிறகு பொங்கலுக்கு வெளியானது. எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரண் தனது பேரன் ராமுவுடன் வசிக்கிறார். அந்த பேரனுக்கு எம்ஜிஆருடன் தொடர்பு இருப்பதாக அந்த தாத்தா நினைக்கிறார். இந்த படத்தில் அந்த தாத்தா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
கார்த்தி எந்த கவலையும் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறார். காவல் துறையில் பணியாற்றும் அவனது தாத்தா ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்ள அப்போது பேரன் ராமுவிடம் நடக்கும் ஒரு மாற்றம்தான் படத்தின் கதை! படம் குறித்து நெட்டிசன் கூறுகையில் இந்த படம் 80, 90 களில் வெளியான படங்களை போல் இருக்கிறது.
எம்ஜிஆர் ரசிகரால் வளர்க்கப்படும் கார்த்தி , எம்ஜிஆர் போல் தோற்றத்தில் இருக்கிறார். அவரது ஸ்டைலையே பின்பற்றி நடிக்கிறார். மீசை கூட அந்த காலத்து இளைஞர் போல் இருக்கிறது. கார்த்தியிடம் எந்த ரோல் கொடுத்தாலும் அதை எளிதாக நடித்து விடுகிறார். இந்த படத்தில் கார்த்தி போட்டிருக்கும் ஆடைகள் எல்லாம் அருமை என்கிறார் ஒரு நெட்டிசன்.
படத்தில் எமோஷன்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக பொங்கலுக்கு வந்த நல்ல பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட படமாக இது உள்ளது. சில சீன்கள் ஜவ்வு போல் இழுக்கின்றன. கீர்த்தி ஷெட்டியின் நடிப்பு அருமையாக இருக்கிறது. பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது என்கிறார் இன்னொரு நெட்டிசன்.
இந்த படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் திரையிடப்படுகிறது. மெய்யழகன் படத்திற்கு பிறகு கார்த்திக்கு இந்த படம் நல்ல கதையம்சம் கொண்டதாக அமைந்துள்ளது என மற்றொரு நெட்டிசன் பாராட்டியுள்ளார். பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீஸாகாத நிலையில் வா வாத்தியார் படம் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படமாக அமைந்துள்ளது.
வா வாத்தியார் கடந்த டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய படம், ஆனால் கோர்ட் கேஸில் இருந்ததால் இந்த படம் வெளியாக தாமதமானது. அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் ரூ 10.35 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து 21.78 கோடி ரூபாயாக செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்த படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு விசாரிக்கப்பட்டு பிறகு வா வாத்தியார் படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 3.75 கோடி ரூபாய் செலுத்த பட தயாரிப்பு நிறுவனம் தயாராக இருந்ததால் இந்த படத்திற்கான தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications