“போல்டு பொண்ணு”ன்னு எல்லாரும் சொல்வாங்க… ஆனா நான் படாத கஷ்டமே கிடையாது –சாய் தன்ஷிகா உருக்கம்
சென்னை: சாய் தன்ஷிகாவை பார்த்தாலே ரொம்ப தைரியமான பெண் போல தான் எல்லாருக்கும் தோணும். ஆனால் சமீபத்தில் அவர் மனம் திறந்து பேசியதைக் கேட்ட ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்திருக்காங்க. "நான் வெளியில காட்டுற மாதிரி அவ்வளவு ஸ்ட்ராங் எல்லாம் கிடையாது. எனக்கும் கஷ்டம் வந்தா அழுவேன். நான் அனுபவிக்காத கஷ்டமே இல்ல"ன்னு அவர் நேரடியாக சொல்லியிருக்கிறார்.
இப்போது வெளியான யோகிடா படத்துக்காக அவர் ரொம்பவே கஷ்டப்பட்டு வேலை பார்த்திருக்கிறாராம். டூப் வேண்டாம் என்று சொல்லி ஆக்ஷன் காட்சிகள்ல தானே நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் பீர் பாட்டில் குத்தி கண்ணுக்கு கீழ காயம் கூட ஏற்பட்டதாம். அந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்தாலும், அதை பெரிய விஷயமாக காட்டிக்காம அமைதியாக வேலை முடிச்சிருக்கிறார்.

சாய் தன்ஷிகா சினிமா துறையில் வந்து இப்போ 17 வருஷம் ஆகுது. இந்த காலகட்டத்தில் அவருக்கு எல்லாமே சுலபமா கிடைச்சிருக்க மாதிரி தோனினாலும், உண்மையில அந்த பாதை அவ்வளவு ஈஸி கிடையாதாம். வாய்ப்பு கிடைக்காம தவித்த நாட்கள், மனசுக்குள் உடைஞ்ச நேரங்கள் எல்லாம் இருந்ததாக அவர் சொல்லியிருக்கிறார். ஆனாலும் அந்த வலியெல்லாம் வெளியில காட்டிக்காம, எல்லாத்தையும் தனக்குள்ளேயே வைத்துக்கிட்டு தான் அவர் பயணம் செய்திருக்கிறார்.
"நீங்க ரொம்ப போல்டு"ன்னு எல்லாரும் சொன்னாலும், அந்த போல்டு இமேஜ்க்குள்ள நிறைய கஷ்டமும் வலியும் மறைஞ்சிருக்கிறது என்பது இப்போ தான் ரசிகர்களுக்கு புரிய ஆரம்பிச்சிருக்கிறது. அதனால் தான் சமூக வலைதளங்களில் பலரும் சாய் தன்ஷிகாவுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
இதோடு மட்டும் இல்லாமல், நடிகையா மட்டும் இல்ல, இயக்குநராகவும் ஆகணும்னு ஆசை இருக்குன்னும் அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இயக்கம் என்பது லேசான விஷயம் கிடையாது, முதல்ல உதவி இயக்குநராக இருந்து கத்துக்கணும்னு நினைப்பதாகவும் கூறியிருக்கிறார். சினிமாவை வெறும் புகழுக்கான துறையா இல்லாமல், சீரியஸாக தான் அவர் பார்க்கிறார் என்பதும் இதுல தெரிகிறது.
விஷாலுடன் இருக்கும் காதல், நிச்சயதார்த்தம் குறித்து எங்க போனாலும் "கல்யாணம் எப்போ?"ன்னு கேள்வி வருது என்பதையும் அவர் பகிர்ந்திருக்கிறார். அதற்கெல்லாம் பதில் சொல்லி சொல்லி கொஞ்சம் களைச்சு போயிட்டதாகவும் சொல்கிறார். இருந்தாலும், ரசிகர்கள் பக்கம் இருந்து அவருக்கு வரும் ஆதரவும் அன்பும் தான் தன்னை இன்னும் முன்னுக்கு தள்ளி கொண்டு போகுது என்பதும் அவர் பேச்சில் இருந்து புரிகிறது.
மொத்தத்தில், வெளில ரொம்ப தைரியமா தெரிகிற சாய் தன்ஷிகாவின் வாழ்க்கைக்குள்ள இவ்வளவு போராட்டமும் வலியும் இருந்தது தெரிய வந்தது ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
விஜய்யின் விவாகரத்து பிரச்சனை.. மகன் ஜோசன் ஈரோடு தொழிலாளர்களுடன் செய்த செயல்! குவியும் பாராட்டு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications