ஐஏஎஸ்-ஐபிஎஸ் தேர்வுக்கு பயிற்சி
சென்னை அண்ணா நகரில் அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் செயல்படும் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி மற்றும் மத்திய குடிமைப் பணிகளுக்கான நடத்தப்படும் பூர்வாங்க தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சி வகுப்புகளில் சேர தகுதியுள்ள ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், பிற்படுத்தபப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர வகுப்பைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்த 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா மேலாண்மை நிலைய இயக்குனர் மற்றும் பயிற்சித்துறை தலைவர் கூறியுள்ளார்.
இப்பயிற்சி மையத்தில் சேர நவம்பர் 8ம் தேதி நடக்க உள்ள நுழைவு தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற மாணவர்கள் சென்னை அண்ணா நகரில் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மைய முதல்வருக்கு செப்டம்பர் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நுழைவு தேர்வுகள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை ஆகிய ஊர்களில் நடக்க உள்ளது.
மேலும் விவரங்களுக்கு: www.civilserviceindia.com












Click it and Unblock the Notifications