For Daily Alerts
Just In
ஒடித்து முகர்ந்தால் இரத்தவாடை....
ஒரு கையில் துப்பாக்கி
மறு கையில் நீள் அருவாள்
சப்தத்தின் எதிரொலியாய் பாய
எதிரே ஈர ரோஜாவும் சில வண்ணத்துப்பூச்சிகளும்
வெடிச்சத்தம் பழகிப்போன காதுகள்
ஓடி ஒளியப்பழகிய கால்கள்
சிந்தனைகள் மழுங்கிப்போய்
பயம் மட்டுமே முன்னிற்கும் வாழ்க்கை
போர் முடிந்து நாளாகியும்
மூளையின் செல்களெல்லாம் இரத்தமும்
கிழிந்த சதைகளுமாய் போராளிகள்
ஏறிமிதித்துப் போன என் தங்கையின் பிணநினைவு
காற்றுக்குச் சிதறிவிழும் பூம்பிஞ்சுகளாய்
சிதறிக்கிடந்தன சிறுகுழந்தைகளின் பிணங்கள்
இனி புதைப்பதற்கு இடமில்லா நிலையில்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது
குழந்தைகளின் புதைகுழிமேல்
முளைத்திருந்தன சில செடிகள்
ஒடித்து முகர்ந்தால் இரத்தவாடை....
-ரிஷி சேது ([email protected])
Comments
Story first published: Tuesday, November 17, 2009, 17:40 [IST]