ஒடித்து முகர்ந்தால் இரத்தவாடை....
Subscribe to Oneindia Tamil
ஒரு கையில் துப்பாக்கி
மறு கையில் நீள் அருவாள்
சப்தத்தின் எதிரொலியாய் பாய
எதிரே ஈர ரோஜாவும் சில வண்ணத்துப்பூச்சிகளும்
வெடிச்சத்தம் பழகிப்போன காதுகள்
ஓடி ஒளியப்பழகிய கால்கள்
சிந்தனைகள் மழுங்கிப்போய்
பயம் மட்டுமே முன்னிற்கும் வாழ்க்கை
போர் முடிந்து நாளாகியும்
மூளையின் செல்களெல்லாம் இரத்தமும்
கிழிந்த சதைகளுமாய் போராளிகள்
ஏறிமிதித்துப் போன என் தங்கையின் பிணநினைவு
காற்றுக்குச் சிதறிவிழும் பூம்பிஞ்சுகளாய்
சிதறிக்கிடந்தன சிறுகுழந்தைகளின் பிணங்கள்
இனி புதைப்பதற்கு இடமில்லா நிலையில்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது
குழந்தைகளின் புதைகுழிமேல்
முளைத்திருந்தன சில செடிகள்
ஒடித்து முகர்ந்தால் இரத்தவாடை....
-ரிஷி சேது ([email protected])












Click it and Unblock the Notifications