”நான் பிரதமர் பதவிக்கான ரேஸில் இல்லை” - சரத் பவார்
டெல்லி: நான் பிரதமர் போட்டியில் இல்லை என்று மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் கூறியுள்ளார்.
டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான் பிரதமர் போட்டியில் இல்லை, எ.ம்பிக்கள்தான் அதனை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் என எந்த கட்சிக்கும் தேசிய பெரும்பான்மை கிடைக்காது.மாநில கட்சிகளின் துணையுடன் தான் ஆட்சி அமைக்க முடியும்.
மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. வெற்றி பெறும் எம்.பிக்கள் சேர்ந்து பிரதமரை தேர்வு செய்வார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த ஜனவரியில் தான் இனி பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும்,இதனால் தனக்கு கட்சிப்பணி ஆற்ற கூடுதல் நேரம் கிடைக்கும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.