FACT CHECK - பள்ளி மாணவர்கள் உளுந்தூர்பேட்டையில் கஞ்சா கடத்தினார்களா? பரவிய செய்தியும் உண்மையும்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் சிக்கியதாக செய்திகள் வெளியான நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போலீசார் எல்சஎலவனாசூர்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்ற 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் 6 பாக்கெட்டுகளில் 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் பள்ளி சிறார்கள் என்று செய்திகள் வெளியாகின.

இவர்கள் அதை இனிப்பு பண்டங்களுடன் கலந்து பிரித்து கொடுக்க திட்டமிட்டதாகவும் சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. பொதுமக்களும் இதனை அதிக அளவில் பகிர்ந்து வந்தனர். இது தொடர்பான உண்மையை அறியும் முயற்சியில் ஈடுபட்டோம். முதலில் ஊடகங்களில் வெளியான செய்திகளை ஆராய்ந்தபோது கைதானவர்கள் பீளமேடு கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 23), மேலப்பாளையம் பாண்டியன் (வயது 20) என்பது தெரியவந்த்து. இதன் மூலம் இவர்கள் பள்ளி சிறார்கள் இல்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில் இது குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறை விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதன்படி, “கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டம், எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் இரண்டு குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 6 பாக்கெட் (சுமார் 150 கிராம் கஞ்சா மதிப்பு 1500/- ரூபாய் ) கைப்பற்றப்பட்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பள்ளியில் படிக்கும்மாணவர்கள் அல்ல.
இது தொடர்பான செய்தியை திரித்து உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் நான்கு பேரை காவல் துறையினர் துரத்தி பிடித்து அவர்களிடம் இருந்து 2,00,000/- ரூபாய் மதிப்புடைய 500 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கியதாகவும் அதை இனிப்போடு கலந்து சக மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்டதாகவும் சமூக வலைதளம் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகைப்படுத்தப்பட்டு பொய்ச்செய்தி பரவி வருகிறது.
இது சம்மந்தமாக தனியார் செய்தி தொலைக்காட்சி மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர் இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிட்டு உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
பள்ளி மாணவர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டங்கள் சிக்கியதாக பரவிய செய்தி
முடிவு
கஞ்சா கடத்திய இருவருமே 20 வயதை கடந்தவர்கள். பள்ளி சிறுவர்கள் இல்லை.
ரேட்டிங்
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications