Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FACT CHECK - பள்ளி மாணவர்கள் உளுந்தூர்பேட்டையில் கஞ்சா கடத்தினார்களா? பரவிய செய்தியும் உண்மையும்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் சிக்கியதாக செய்திகள் வெளியான நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போலீசார் எல்சஎலவனாசூர்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்ற 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் 6 பாக்கெட்டுகளில் 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் பள்ளி சிறார்கள் என்று செய்திகள் வெளியாகின.

Fact check about ganja seized from school students near Ulundurpet

இவர்கள் அதை இனிப்பு பண்டங்களுடன் கலந்து பிரித்து கொடுக்க திட்டமிட்டதாகவும் சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. பொதுமக்களும் இதனை அதிக அளவில் பகிர்ந்து வந்தனர். இது தொடர்பான உண்மையை அறியும் முயற்சியில் ஈடுபட்டோம். முதலில் ஊடகங்களில் வெளியான செய்திகளை ஆராய்ந்தபோது கைதானவர்கள் பீளமேடு கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 23), மேலப்பாளையம் பாண்டியன் (வயது 20) என்பது தெரியவந்த்து. இதன் மூலம் இவர்கள் பள்ளி சிறார்கள் இல்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில் இது குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறை விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதன்படி, “கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டம், எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் இரண்டு குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 6 பாக்கெட் (சுமார் 150 கிராம் கஞ்சா மதிப்பு 1500/- ரூபாய் ) கைப்பற்றப்பட்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பள்ளியில் படிக்கும்மாணவர்கள் அல்ல.

இது தொடர்பான செய்தியை திரித்து உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் நான்கு பேரை காவல் துறையினர் துரத்தி பிடித்து அவர்களிடம் இருந்து 2,00,000/- ரூபாய் மதிப்புடைய 500 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கியதாகவும் அதை இனிப்போடு கலந்து சக மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்டதாகவும் சமூக வலைதளம் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகைப்படுத்தப்பட்டு பொய்ச்செய்தி பரவி வருகிறது.

இது சம்மந்தமாக தனியார் செய்தி தொலைக்காட்சி மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர் இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிட்டு உள்ளது.

Fact Check

வெளியான செய்தி

பள்ளி மாணவர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டங்கள் சிக்கியதாக பரவிய செய்தி

முடிவு

கஞ்சா கடத்திய இருவருமே 20 வயதை கடந்தவர்கள். பள்ளி சிறுவர்கள் இல்லை.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+