பிரதமர் மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி என பரவும் படம்.. பலகையில் எழுதியது என்ன? FACT CHECK
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பலகையில் எழுதி சிறுமி அவரை அசிங்கப்படுத்திவிட்டதாக தகவல் பரவி வரும் நிலையில் அது குறித்து உண்மை தன்மையை அலசுவோம்.
கடந்த சில நாட்களாக பேஸ்புக், வாட்ஸ் அப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காவி உடை அணிந்து இருக்கும் சிறுமி ஒருவர் பலகையுடன் நின்றுகொண்டு இருக்கும் புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. "மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த புகைப்படத்தில், "அன்புள்ள மோடி தாத்தா; என் பெயர் துவாரகா மதிவதனி. 2 ஆம் வகுப்பு படிக்கிறேன். திருச்சிக்கு வந்த நீங்க ஏன் நெல்லைக்கு வரல; வெள்ளத்தால பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஸ்டாலின் தாத்தா 6000 ரூபாய் கொடுத்தாரு. நீங்க ஒன்னுமே தரல. நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்; எங்களுக்கு நிவாரணம் குடுங்க." என்று அந்த பலகையில் எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்த உண்மை தன்மையை ஆராய ரிவர்ஸ் இமேஜ் தேடலில் ஈடுபட்டோம். அப்போது இந்த சிறுமி பதாகையுடன் நிற்கும் வேறு சில புகைப்படங்களும் கிடைத்தன. அதில், "அன்புள்ள மோடி தாத்தா; என் பெயர் துவாரகா மதிவதனி. 2 ஆம் வகுப்பு படிக்கிறேன். எங்க ஊர் நாகப்பட்டினம். இங்கே அரசு நடத்தும் பள்ளிக்கூடம் ஹிந்தி படிக்க எதுவும் இல்லை. பள்ளிக்கூடம் கட்டுறதுக்கு என் அப்பாகிட்ட இடம் தர சொல்லுறேன். நீங்க பள்ளிக்கூடம் கட்டித் தாங்க. அதுல நாங்களும் ஹிந்தி கத்துக்கனும். ஜெய் ஹிந்த்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த ரிவர்ஸ் இமேஜ் தேடலில் மேலும் பல படங்கள் கிடைத்தன. அதில் அந்த சிறுமி தனது தந்தையுடன் நிற்கும் புகைப்படங்களும் கிடைத்து உள்ளன. இது எங்கே எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற விபரத்தை அறிய முற்பட்டோம். அப்போது திருச்சியில் புதிய விமான நிலைய திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி அண்மையில் சென்றபோது எடுக்கப்பட்ட படம் என்பது உறுதியானது.
அதேபோன்று ஒரு தனியார் நாளிதழின் யூடியூப் சேனலிலும் அந்த சிறுமியுடன் அவரது தந்தை பேட்டி அளித்து இருக்கிறார். சில தொலைக்காட்சி ஊடகங்களிலும் இந்த பேட்டி வெளியாகி இருக்கிறது. அதில், "சிறுமி இந்தி கற்க வேண்டும் என விரும்பியதால் இப்படி கோரிக்கை விடுத்தோம்." என்று தெரிவித்தார். இதனை போட்டோஷாப் செய்து சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருப்பதை உறுதிபடுத்துகிறோம்.

Fact Check
வெளியான செய்தி
நெல்லைக்கு வந்து வெள்ள நிவாரண நிதியை எப்போது தருவீர்கள் என்று பிரதமர் மோடியிடம் சிறுமி கேட்டு பலகை வைத்து இருந்ததாக புகைப்படம் பரவி வருகிறது.
முடிவு
இந்தி கற்பதற்கான பள்ளிக்கூடத்தை கட்டித் தருமாறு சிறுமி பலகை வைத்து இருந்தார்.
ரேட்டிங்
-
மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை! -
IND VS NZ Final: 2023 உலககோப்பை பைனல் போல்.. நேரில் பார்க்கும் பிரதமர் மோடி? நிலவரம் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications