Fact Check: பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளதா? உண்மை என்ன?
சென்னை: பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இது வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. தமிழக மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதும் இதற்கு ஒரு ஒரு காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது.

வதந்தி: 'கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) அதிகரித்துள்ளது' என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
உண்மை என்ன?: இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிரசவத்தின் போது ஒரு லட்சம் பேரில் 134 ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) கடந்த 2018-20ல் 54 ஆகக் குறைந்து தற்போது 2023-24ல் 45.5 ஆக குறைந்தே இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகப் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரமாக, மத்திய அரசின் சார்பில் மாநில வாரியாக வெளியிடப்பட்ட தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) அதிகரித்துள்ளது என செய்தி பரவியது.
முடிவு
இது வதந்தி. 2001 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிரசவத்தின் போது ஒரு லட்சம் பேரில் 134 ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) 2023-24ல் 45.5 ஆக குறைந்துள்ளது.
ரேட்டிங்
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications