Fact Check: பெஞ்சல் புயலின் போது மெரினா அருகே மின்கசிவு? பகிரப்படும் வீடியோ- உண்மை என்ன?
சென்னை: வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் பெரும் விளையாட்டைக் காட்டிவிட்டது. வங்கக் கடலில் மையம் கொண்ட மற்ற புயல்களை விட பெஞ்சல் புயல் வானிலை ஆய்வு மையத்தையே கடுமையாக குழப்பிவிட்டு வேடிக்கை பார்த்தது. பெஞ்சல் புயல் ஒருவழியாக நேற்று புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டாலும் நகராமல் நிலை கொண்டு மீண்டும் விளையாடிக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் பெஞ்சல் புயல் பாதிப்பை முன்வைத்து பழைய வீடியோக்கள், வெளிநாட்டு வீடியோக்களை முன்வைத்து சிலர் பீதியை கிளப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பரவும் செய்தி: பெஞ்சல் புயலின் போது சென்னை மெரினா அருகே மின்சாரம் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதங்களில் பதிவிடப்பட்டது. சென்னை மாநகரில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மெரினா அருகே மின்கசிவு என்று பரவும் வியட்நாம் காணொளி!@CMOTamilnadu @TNDIPRNEWS (1/2) https://t.co/wQi4KmmQDQ pic.twitter.com/xHMn9eNtlI
— TN Fact Check (@tn_factcheck) November 30, 2024
உண்மை என்ன?: இந்த வீடியோ தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மெரினா அருகே மின்சாரம் பாய்ந்ததாக தலைப்பிடப்பட்டு பகிரப்படும் வீடியோ, பொய்யானது. அந்த வீடியோ வியட்நாமில் எடுக்கப்பட்டு ஏற்கனவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தது. சென்னை மெரினா அருகே அப்படி ஒரு நிகழ்வே நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், பழைய வீடியோக்களை வைத்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
சென்னை மெரினா அருகே மின்சாரம் பாய்ந்ததாக வீடியோ பகிரப்பட்டடு வருகிறது.
முடிவு
இந்த வீடியோ வியட்நாமில் எடுக்கப்பட்டது. சென்னையில் எடுக்கப்பட்டது அல்ல.












Click it and Unblock the Notifications