Fact Check: கோயிலில் வழிபாடு நடத்தியவர்கள் மீது தமிழக காவல்துறை தடியடி நடத்தியதா? உண்மை என்ன
சென்னை: கோயிலில் வழிபாடு நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்படுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து தமிழ்நாடு உண்மைச் சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. இதில், கோயிலில் வழிபாடு நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்படுவதாக பரப்பப்படும் வீடியோவானது 2020 ஆம் ஆண்டு கொரோனா கால காணொளி என விளக்கம் அளித்துள்ளது.
தற்போதைய நவீன காலத்தில் அனைவரது கையிலும் செல்போன் வந்துவிட்டது. அதோடு இணைய ஸ்பீடும் அதிகமாக வந்துள்ளது. இதனால் எந்த ஒரு செய்தியும் நொடிப்பொழுதில் தங்களது கைகளுக்குள் வந்துவிடுகிறது. எவ்வளவு பெரிய விஷயம் நடந்தாலும் அது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் நம்மால் தெரிந்துகொள்ள முடிகின்றது.

தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு
அவ்வளவு வேகமாக தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் இவற்றில் போலி செய்திகளும் வேகமாக பரவுவதற்கு வழி வகுத்து விடுகின்றன. சமூக வலைத்தளங்களில் உண்மை செய்தியை விட போலி செய்திகளே அதிகம் பரவுகின்றன என்ற ஒரு கருத்தும் பரவலாக இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 499-ன் படி அவதூறு என்பது குற்றமாகும்.
இந்த நிலையில் தான் தமிழக அரசு, பொய்யான தகவல்கள் மற்றும் தவறான புரிதல்கள், வதந்திகளை கட்டுப்படுத்துவதற்காக "தமிழ்நாடு உண்மைச் சரிபார்ப்பு குழு (TN Fact Check)" என்ற ஒன்றை அமைத்துள்ளது. சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப், யூ-டியூப் உள்ளிட்ட பல தளங்களில் விரைவாக பரவும் தவறான செய்திகளை மக்கள் நம்பி ஏமாறாமல் இருக்க இது தொடர்பான உண்மைத் தன்மையை இந்த குழு ஆராய்ந்து கூறும்.
பக்தர்கள் மீது போலீசார் தடியடி
இதனால் போலி செய்திகள் பரப்பப்படுகிறது தடுக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக உண்மை சரிபார்த்த தகவலை வெளியிடும் பொறுப்பை இந்த குழு மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவானது அரசுத் திட்டங்கள், அரசு நடவடிக்கைகள், சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய செய்திகள் உள்ளிட்டவற்றை பற்றிய சந்தேகங்கள் எழுந்தாலோ அல்லது பொய்யான தகவல்கள் பரவினாலோ அவற்றை ஆய்வு செய்து உண்மையை வெளியிடுகிறது.
அந்த வகையில் தான் தற்போது கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோவிற்கு தலைப்பாக, இதுபோல் எங்காவது மசூதிகளிலோ, சர்ச்சுகளிலும் பக்தர்களை அடித்தது போன்ற வீடியோவை காவல்துறை வெளியிடுமா? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
மேலும் ஹிந்துக்கள் தான் இங்கு தன் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். ஹிந்து விரோத அரசிற்கு இனி எந்த காலத்திலும் வாக்களிக்காமல் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று பதிவிட்டு, அந்த வீடியோவில் காவல்துறையினர் இந்து கோயிலுக்குள் சென்று வழிபடும் பக்தர்களை தடியால் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி இருந்தது.
இந்த வீடியோ சமூகத்தில் அமைதியை குலைக்கும் வகையிலும், மத பிரச்சினையை தூண்டும் வகையிலும் இருந்ததாலும், வேகமாக இந்த வீடியோ பரவியதாலும், தமிழ்நாடு உண்மைச் சரிபார்ப்பு குழு (TN Fact Check)" இது குறித்த உண்மைத் தன்மையை வெளியிட்டுள்ளது.
தற்போது பரப்பப்படும் இந்த வீடியோவானது கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது நடந்ததுபோல பரப்பப்படுவது போலியானது என்றும் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் என்று விளக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கோயிலுக்குள் சென்று வழிபடும் பக்தர்கள் மீது தடியடி என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
முடிவு
கோயிலில் வழிபாடு நடத்தியவர்கள் மீது தடியடி என்று பரப்பப்படும் 2020 ஆம் ஆண்டு கொரோனா கால காணொளி என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரேட்டிங்
-
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications