Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: தேர்தல் பத்திரம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சி நிதி வாங்கியதா? பரவும் தவறான தகவல்! உண்மை இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்றும், அவற்றை பயன்படுத்த தடை விதிப்பதாகவும் உச்சநீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக தகவல் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகின்றன.

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?: அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது. இதனையடுத்து இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இவை மற்ற மாதங்களில் 10 நாட்களும் தேர்தல் இருக்கும் மாதங்களில் அனைத்து நாட்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

Fact check: Misinformation spreading that the Marxist Communist Party received funds through election bonds


என்ன பிரச்சனை?: “நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தங்களின் இந்தத் திட்டத்தைப் பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சட்டத் திருத்தங்களை பண மசோதாவாக கொண்டுவந்து, நாடாளுமன்றத்தில் எந்தவொரு விவாதமும் நடத்தாமலேயே நிறைவேற்றிக் கொண்டது” என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

மத்திய அரசு சொல்வது என்ன?: இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சொலிசிட் ஜெனரல் துஷார் மேத்தா, “தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான். ஏனெனில் சிலர் குறிப்பிட்ட கட்சிக்கு அதிக அளவில் நிதியளித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் நிதியளித்த கட்சி தோல்வியடைந்தால், வெற்றியடைந்த கட்சியினர், தோல்வியடைந்த கட்சிக்கு நிதியளித்தவர்களை பழிவாங்கக்கூடும். எனவே தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான்” என்று கூறியிருந்தார்.

அரசியல் கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?: 2018-2023 வரையிலான காலத்தில் அரசியல் கட்சிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கையில், பாஜக ரூ.6,566.11 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.1,123.3 கோடி, திரிணமூல் காங்கிரஸ் ரூ. 1,092.98 கோடி திமுக ரூ. 616.5 கோடி, அதிமுக ரூ.6.05 கோடியும் பெற்றுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

சிபிஎம் நிதி பெற்றதா?: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த பத்திரங்கள் மூலம் நிதியை பெறவில்லை என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குறிப்பிட்டுள்ளார். அதேபோல கட்சியின் தலைமையும் இதனை உறுதி செய்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறும் கட்சிகள் எஸ்பிஐ வங்கியில் இந்த பத்திரங்களை மாற்றுவதற்கு ஒரு அக்கவுண்ட்டை தொடங்க வேண்டும். ஆனால் சிபிஐஎம் கட்சி அப்படியாக எந்த அக்கவுண்ட்டையும் தொடங்கவில்லை. இத்தனைக்கும் கேரளாவில் சிபிஎம்தான் ஆளும் கட்சியாக இருக்கிறது.

Fact Check

வெளியான செய்தி

தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.367 கோடி நன்கொடை பெற்றிருக்கிறது.

முடிவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற வேண்டும் எனில் எஸ்பிஐ வங்கியில் அதற்கென தனி அக்கவுண்ட் இருக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்படியான எந்த அக்கவுண்ட்டும் இல்லை.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+