மோடி சொன்னதை போல இல்லை.. தேர்தல் பிரச்சாரத்தில் அம்பானி, அதானி பற்றி ராகுல் காந்தி பேசியுள்ளாரே!
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி தொழிலதிபர்கள் அதானி, அம்பானி பற்றி பேசாமல் மவுனம் காப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில் அது பொய் என்பதும், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 25 மேடைகளில் அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மாதம் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டன. இன்னும் 4 கட்ட தேர்தல் மீதமுள்ளது. 4வது கட்ட தேர்தல் என்பது வரும் 13ம் தேதி 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

இந்த 4வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வர உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் கடந்த 8 ம் தேதி பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியது விவாதத்தை ஏற்படுத்தியது.
அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ‛‛நண்பர்களே கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் (மறைமுகமாக ராகுல் காந்தி) மீண்டும் மீண்டும் ஒன்றை கூறி வந்ததை கவனித்து இருப்பீர்கள். தொழிலதிபர்கள், தொழிலதிபர்கள், தொழிலதிபர்கள் என்று பல ஆண்டுகளாக அவர் கூறி வந்தார். பிறகு அம்பானி-அதானி, அம்பானி-அதானி, அம்பானி-அதானி என்று சொல்ல தொடங்கினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் அம்பானி-அதானி பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திவிட்டார். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் அம்பானி, அதானி பற்றி பேசவில்லை. டெம்போ நிறைய காங்கிரஸ் கட்சி பணம் பெற்றுள்ளது'' என குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தங்களின் வலைதள பக்கங்களில் தொடர்ந்து ராகுல் காந்தி அதானி, அம்பானி பற்றி பேசி வருகிறார் என தெரிவித்து இருந்தனர்.
இதுபற்றி நாம் சோதனை செய்து பார்த்தபோது, லோக்சபா தேர்தல் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் 17 முதல் மே மாதம் 8 ம் தேதி வரை ராகுல் காந்தி மொத்தம் 25 பொதுக்கூட்டங்களில் அதானி, அம்பானி பற்றி பேசியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் காங்கிரஸ் கட்சியின் இணையதள பக்கமான யூடியூப்பில் உள்ளார். மே மாதம் தொடங்கியது முதல் 8 ம் தேதி வரை நடந்த 6 பொதுக்கூட்டங்களில் அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கடந்த 6 ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‛‛அதானி என்பது பெயர். நாம் பயன்படுத்தும் தண்ணீர், வனம், நிலம் உள்ளிட்டவற்றில் அவர் கண்வைத்துள்ளார். பிரதமர் மோடி, அதானிக்காக செயல்பட்டு வருகிறார். அதானியும், பிரதமர் மோடியும் சேர்ந்து அரசியலமைப்பு புத்தகத்துக்கு முடிவுரை எழுத நினைக்கின்றனர். நம்மால் அந்த புத்தகம் இன்றி ஆட்சி செய்ய முடியாது'' என விமர்சனம் செய்திருந்தார்.
அதன்பிறகு கடந்த 7 ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‛‛ நாட்டில் உள்ள உரிமைகள், வனங்கள் அனைத்தும் கோடீஸ்வரரான அதானி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்றார். அதேநாளில் ரட்லம் தொகுதியில் பேசியபோது முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தை ஊடகங்கள் ஒளிபரப்பியது தொடர்பாக பேசியிருந்தார்.
இதுதவிர கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா, டையூ டாமன் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி அதானி, அம்பானி பற்றி பேசியிருந்தார். அதில் அதானி, அம்பானி உள்பட 25 நபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு ரோடு, காற்றாலை, மின்சாரம், தளவாட பொருட்கள் கொள்முதல் உள்ளிட்ட ஒப்பந்தங்களை வழங்குகிறது என தெரிவித்து இருந்தனர்.
அதன்படி பார்த்தால் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கூட ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய அரசு, அதானி, அம்பானிக்கும் இடையேயான தொடர்பு பற்றி பேசி வருகிறார். இதன்மூலம் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி பேசவில்லை என பிரதமர் மோடி தெரிவித்து இருப்பது உண்மைக்கு புறம்பானதாகும்.

Fact Check
வெளியான செய்தி
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி பேசவில்லை என பிரதமர் மோடி குற்றச்சாட்டு
முடிவு
லோக்சபா தேர்தல் தேதி மார்ச் 16ல் அறிவிக்கப்பட்டது. மார்ச் 17 முதல் மே 8 வரை 25 பொதுக்கூட்டங்களில் அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி பேசியுள்ளார்
ரேட்டிங்
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?











Click it and Unblock the Notifications