டிரம்ப் திடீர் மரணம்? அவரது மகனின் ட்வீட்டால் பயங்கர குழப்பம்.. கடைசியில் என்னென்னு பாருங்க
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இது குறித்த உண்மையை நாம் பார்க்கலாம்.
கடந்த 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் டிரம்ப். அமெரிக்க வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய அதிபர்களில் ஒருவர் என்று டிரம்பை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். அந்தளவுக்குச் சர்ச்சைகளின் நாயகனாகவே டிரம்ப் இருந்தார்.

அவர் 2020 இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், அதன் பிறகும் சர்ச்சைக்கு மத்தியிலேயே இருந்தார். அங்கே கடந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு இப்போதே அவர் ரெடியாகிவிட்டார்.
குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். கட்சியில் அவரது செல்வாக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், மீண்டும் டிரம்ப் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகவே இருக்கிறது. வரும் காலத்தில் டிரம்ப் தனது பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தவே போகிறார்.
டிரம்ப் உயிரிழப்பு?: இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்பின் மூத்த மகனான டிரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட்கள் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. அவரது பக்கத்தில், "எனது தந்தை டொனால்ட் டிரம்ப் காலமானார் என்பதை கனத்த இயத்துடன் அறிவிக்கிறேன்.. அவருக்குப் பதிலாக நான் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவேன்" என்று அவர் பதிவிட்டிருந்தார். அமெரிக்க நேரப்படி காலை 8.46க்கு அவர் இந்த ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.
டிரம்பின் மகனே இப்படியொரு ட்வீட்டை போட்டதால், அது சர்வதேச அளவில் மிக பெரிய பரபரப்பைக் கிளப்பியது. வெறும் சில மணி நேரத்தில் அது பல லட்சம் பார்வைகளையும் அவர் பெற்றது. டிரம்பின் மகன் கூறியது உண்மைதானா எனப் பலரும் கேள்வியையும் எழுப்ப தொடங்கினர். அந்த பின்னரே இதில் என்ன நடந்தது என்பது தெரிய வந்துள்ளது.
உண்மை என்ன: ட்ரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கத்தில் இருந்து இந்த ட்வீட் வந்திருந்தாலும் இதை அவர் பதிவிடவில்லையாம். அவரது எக்ஸ் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்திருந்த நிலையில், அவர்களே இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பதிவிட்டுள்ளனர். இது மட்டுமின்றி ஹோக் செய்யப்பட்ட போது பல ஆட்சேபனைக்குரிய ட்வீட்களும் அதில் இருந்தன. தற்போதைய அமெரிக்க அதிபர் பைடன் மோசமாக விமர்சிக்கும் ட்வீட்கள் இருந்தன. மேலும், வடகொரியாவுக்கு எதிரான கருத்துக்களும் இருந்தன.
இதை எல்லாம் ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். இறப்பு குறித்த முதல் ட்வீட் வந்து சுமார் 20 நிமிடங்கள் கழித்து இந்த போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 77 வயதான முன்னாள் அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைத்தள பக்கத்தில் சில பதிவுகளைப் பகிர்ந்தார். இடைப்பட்ட நேரத்தில் டிரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டு சர்ச்சை பதிவுகளும் டெலிட் செய்யப்பட்டன.

Fact Check
வெளியான செய்தி
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் டிரம்ப் ஜூனியர் பதிவிட்டதால் பரபரப்பு
முடிவு
டிரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கத்தைச் சிலர் ஹேக் செய்து இதுபோல போலியாகப் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications