Fact Check: என்னாது பஸ் ஸ்டிரைக்கின் போது தற்காலிக டிரைவர்களால் விபத்தா? தீயாய் பரவும் பொய் செய்தி!
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது தற்காலிக டிரைவர்கள் ஓட்டியதால் பேருந்து விபத்துக்குள்ளானதாக சொல்லப்படும் தகவல்கள் பொய்யானது.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் செய்து வந்தனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் இவர்களுடைய போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் பொங்கல் பண்டிகையின் காரணமாக தற்போது போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு ஊழியர்களை நீதிபதிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து வரும் ஜனவரி 19-ஆம் தேதி வரை தொழிற்சங்கங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தின் போது அனுபவமே இல்லாத தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்து ஓட்டியதாக நிறைய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.
அதில் ஒரு புகைப்படமானது, மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் டூ திண்டுக்கல் நோக்கி தற்காலிக ஓட்டுநர் ஓட்டி வந்த அரசு பேருந்து, கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயம் அடைந்ததாக தகவல் என குறிப்பிட்டு தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கிறது.
இந்த நிலையில் இந்த தகவல் பொய்யானது என தெரியவந்துள்ளது. இந்த படம் மட்டுமல்லாமல் நிறைய படங்களை நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தகவல்கள் பொய் என TN Fact check தெரிவித்துள்ளது.
இதுகுறித்து TN Check எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அந்த விபத்து நிகழ்ந்தது கடந்த 2023 ஜூன் 25 அன்று. பேருந்தின் எதிரே வந்த கார் டயர் வெடித்து, பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அண்மையில் தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்பட்ட விபத்து என்ற செய்தி பொய்யானதாகும்.
உண்மை:
— TN Fact Check (@tn_factcheck) January 11, 2024
அந்த விபத்து நிகழ்ந்தது கடந்த 2023 ஜூன் 25 அன்று. பேருந்தின் எதிரே வந்த கார் டயர் வெடித்து, பேருந்தின்மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அண்மையில் தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்பட்ட விபத்து என்ற செய்தி பொய்யானதாகும். (1/2) https://t.co/Ft1nU5OTEF

Fact Check
வெளியான செய்தி
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் போது தற்காலிக டிரைவர்கள் பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக சமூகவலைதளங்களிலும் செய்திகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு
சமூகவலைதளங்களில் வைரலாகும் விபத்து படம் பொய்யானது. அந்த விபத்து நிகழ்ந்தது கடந்த 2023 ஜூன் 25 அன்று. பேருந்தின் எதிரே வந்த கார் டயர் வெடித்து, பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
ரேட்டிங்
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications