சிவப்பு மண்டலமாக குவஹாத்தி அறிவிப்பு என்று பரவும் போலி தகவல்.. மக்களே நம்ப வேண்டாம்
சென்னை: உள்துறை அமைச்சகம் அசாம் மாநில தலைநகர், குவஹாத்தியை சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவலை அரசு மறுத்துள்ளது.
குவாஹாத்தியை சிவப்பு மண்டலமாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது என்று அந்த செய்தி கூறுகிறது. மாநில அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் செய்தி மேலும் கூறுகிறது.

இருப்பினும், அசாமில் தற்போது சிவப்பு மண்டல மாவட்டங்கள் இல்லாததால் இந்த தகவல் போலியானது என்பதை விவரம் அறிந்தவர்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். மேலும், சுகாதார விவகார அமைச்சகம்தான் இதுபோன்ற மண்டலங்களை தீர்மானிக்கிறது, உள்துறை அமைச்சகம் அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது.
மண்டலங்களை மறு வகைப்படுத்துவது குறித்து மாநிலங்களுடன் பேசப்போவதாக கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது.
புதிய பட்டியல் விரைவில் வெளிவரும் என்றும் அமைச்சும் கூறியுள்ளது. மேலும், திங்கள்கிழமை பிரதமர்கள்-முதல்வர்களுடனான சந்திப்பின்போது, மண்டலங்கள் குறித்து மாநிலங்கள் முடிவு செய்ய அனுமதிக்குமாறு சில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications