எமிரேட்ஸில் மரணமடைந்தது தொழிலதிபர் ஜாய் ஆரக்கல்; ஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் என்பது பொய் செய்தி!
டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஜாய் ஆலுக்காஸ் நகை கடை உரிமையாளர் மரணமடைந்தார் என வெளியான செய்திகள் பொய் என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எமிரேட்ஸில் மரணமடைந்தது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாய் ஆரக்கல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர், கொரோனா வைரஸால் மரணமடைந்தார்; அவர்தான் ஜாய் ஆலுக்காஸ் நகை கடையின் உரிமையாளர் என ஒரு செய்தி வெளியானது. இது சமூகவலைதளங்களில் ரெக்கை கட்டியும் பறந்தது.
ஆனால் இச்செய்தி உண்மை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் பெயர் ஜாய் ஆலுக்காஸ்தான். அவர் நலமுடன் இருக்கிறார். இதனை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் செய்திக் குறிப்பில் ஒன்றில் விளக்கியும் இருக்கிறது.
எமிரேட்ஸில் இறந்தவர் கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெய் ஆரக்கல். இவர் கட்டிய பிராண்டமான அரண்மனையால் ஊடகங்களில் இடம்பிடித்திருந்தார்.
எமிரேட்ஸில் இன்னோ குழுமத்தை நடத்தி வந்தவர் ஜாய் ஆரக்கல். பெட்ரோலியம் சார்ந்த துறையில் ஆரக்கலின் இன்னோவா குழுமம் ஈடுபட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.