வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்க விதித்த தடை விலக்கப்படவில்லை.. அரசு விளக்கம்
டெல்லி: பிசி & பிஎன்டிடி (முன் கருத்தரித்தல் மற்றும் முன் பிறந்த நோயறிதல் நுட்பங்கள் (பாலின தேர்வு தடை) சட்டம் 1994 சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஊடக அறிக்கை கூறியுள்ளது.
இந்த செய்தி, தவறானது மற்றும் முற்றிலும் யூக அடிப்படையிலானது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்தரிப்பதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ குழந்தையின் பாலினத்தை தேர்ந்தெடுப்பதை, தடைசெய்யும் பிசி & பிஎன்டிடி சட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்யவில்லை, என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
COVID19 தொற்றுநோய் காரணமாக, நடந்துகொண்டிருக்கும் லாக்டவுனை கருத்தில் கொண்டு, பிசி மற்றும் பிஎன்டிடி விதிகளின் (1996) கீழ் சில விதிகளை ஒத்திவைக்க அல்லது நிறுத்தி வைக்க சுகாதார அமைச்சகம் 2020ம் ஆண்டு, ஏப்ரல் 4ம் தேதி அறிவிப்பை வெளியிட்டதாக குறிப்பிட்ட ஊடகத்தில் செய்தி வெளியானது.
ஏனெனில், இந்த விதிமுறைகளை பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தற்போது அவகாசம் இருக்காது என்பதால் விதிமுறைகளில் தளர்வு கொண்டுவரப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டது.
Recommended Video
ஆனால் இதை மறுத்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், "ஒவ்வொரு அல்ட்ராசவுண்ட் கிளினிக், மரபணு ஆலோசனை மையம், மரபணு ஆய்வகம், மரபணு கிளினிக் மற்றும் இமேஜிங் மையம் ஆகியவை சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி அனைத்து கட்டாய பதிவுகளையும் அன்றாட அடிப்படையில் பராமரிக்க வேண்டும்" என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications