Fact Check: என்னாது செங்கல்பட்டில் வீடுகள் மூழ்கும் அளவுக்கு வெள்ளமா?.. அதெல்லாம் நம்பாதீங்க!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் திம்மாவரம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மூழ்கியுள்ளதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் துளியும் உண்மை இல்லை. இது எடுக்கப்பட்டது செங்கல்பட்டும் இல்லை.. இவ்வளவு ஏன் இது தமிழ்நாடே இல்லை!
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ஏதோ மேக வெடிப்பு ஏற்பட்டார் போல் மழை கொட்டுகிறது.
இதனால் நந்திவரம், கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பி வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாது தவித்து வருகிறார்கள்.

திம்மாவரம்
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் எடுக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அது பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. அந்த வீடியோவில் வீடுகளை மூழ்கடித்து வெள்ள நீர் கொட்டுகிறது. வீட்டின் மாடியிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்த போது அதிர்ச்சி ஏற்பட்டது.

அதிர்ச்சி
ஏதோ ஆற்றுக்குள் வீடு இருப்பது போல் காட்சியளித்ததால் அதிர்ச்சி அடைந்து விசாரித்த போது அது பழைய வீடியோ என தெரியவந்தது. மேலும் அது திம்மாவரம் பகுதி அல்ல என்றும் ஆந்திரா மாநிலம் என்றும் தெரியவந்தது. ஆந்திரா மாநிலம் கடப்பாவில் உள்ள ராஜம்பேட்டையில் எடுக்கப்பட்டது இந்த வீடியோ.

சமூகவலைதளவாசிகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் கனமழை பெய்தது. எனவே இது செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் இல்லை. பொதுவாக சமூகவலைதளங்களில் பழைய வீடியோக்கள், வேரெங்கோ நடந்த வீடியோக்களை போட்டு மக்களை பீதிக்குள்ளாக்குவது தொடர்கதையாகியுள்ளது. இதை சமூகவலைதளவாசிகள் தவிர்க்க வேண்டும்.

நல்ல விஷயங்கள்
தொழில்நுட்பத்தை நல்ல விஷயங்களை சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும. இது போல் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் கருத்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Fact Check
வெளியான செய்தி
செங்கல்பட்டு மாவட்டத்தில் திம்மாவரம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மூழ்கியுள்ளதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் துளியும் உண்மை இல்லை. இது எடுக்கப்பட்டது செங்கல்பட்டும் இல்லை.. இவ்வள
முடிவு
தொழில்நுட்பத்தை நல்ல விஷயங்களை சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும. இது போல் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் கருத்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications