மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பா? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவியது. மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ள நிலையில், 62 ஆக உயர்த்தப்பட்டதாக இந்தியில் சுற்றறிக்கை பரவியதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. அரசு வெளியிட்ட பதிலில், உண்மைத்தன்மை இல்லாத ஆதாரமற்ற போலியான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. இதனை 62 ஆக உயர்த்தி இருப்பதாக இந்தி மொழியில் அச்சிடப்பட்ட ஒரு சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

அந்த சுற்றறிக்கையில், "மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 2 அதிகரிக்கப்பட்டு, 62 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும். அனுபவமிக்க பணியாளர்கள் கூடுதலாக 2 ஆண்டுகள் சேவை செய்வதன் மூலமாக மத்திய அரசுக்கு உதவ இயலும். இந்த திட்டத்தால் அரசு துறைகளில் காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான செலவும் குறையும். பணியாளர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஓய்வூதியம் பெறுவார்கள் என்பதால், அதற்கான செலவும் அரசுக்கு கணிசமாக குறையும்" என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் அந்த இந்தி சுற்றறிக்கையில், "இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1998-ம் ஆண்டு 61.4 ஆண்டுகள் ஆக இருந்தது. ஆனால் இது 2024-ம் ஆண்டில் 72.24 ஆண்டுகள் ஆக அதிகரித்திருக்கிறது. இதுவும் மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 2 ஆண்டுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்" என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மத்திய அரசு பணியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த சுற்றறிக்கை பறந்த சில மணி நேரத்துக்குள் அது போலியானது என்று கூறி மத்திய அரசு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டிருந்த பதிவில், இந்த "மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. மத்திய அரசு இதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. உண்மைத்தன்மை இல்லாத ஆதாரமற்ற போலியான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ள நிலையில், 62 ஆக உயர்த்தப்பட்டதாக இந்தியில் சுற்றறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
முடிவு
மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. மத்திய அரசு இதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என மத்திய அரசே விளக்கம் தந்துள்ளது.
ரேட்டிங்
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications