தீர்த்துக்கட்டப்பட்ட கமேனி! தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டும்? நிலைமை கைமீறிவிட்டது! உடனே வாங்குங்க
சென்னை: வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அதன் நேரடித் தாக்கம் இப்போது உங்கள் வீட்டு சமையலறை மற்றும் உங்கள் பீரோவில் இருக்கும் நகைப்பெட்டி வரை எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. அயதுல்லா அலி கமேனி கொலையும்.. மத்திய கிழக்கு நாடுகள் போரும்.. ஈரானின் 'டர்ட்டி பாம்' மர்மமும், அமெரிக்காவின் தாக்குதலும் உலகப் பொருளாதாரத்தையே ஒரு 'ரோலர் கோஸ்டர்' பயணத்தில் ஏற்றிவிட்டுள்ளது.
தங்கம்: இனி 'மஞ்சள் உலோகம்' அல்ல... 'நெருப்பு உலோகம்'!
உலகில் எப்போதெல்லாம் போர் பதற்றம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாகத் தேடுவது தங்கத்தைத்தான்.

விலை எகிறியது: போர்ச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை வரலாறு காணாத உயரத்தை எட்டியுள்ளது. சமீபகாலமாக உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக, முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை விட தங்கத்தையே பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். இப்போது அயதுல்லா அலி கமேனி கொலை காரணமாக தங்கம் விலை உச்சம் தொடும் விலை ஏற்பட்டுள்ளது.
தமிழக நிலவரம்: சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் (18k) ரூ.1,35,000-ஐத் தாண்டிய நிலையில், இன்று அது ரூ.1,45,000 முதல் ரூ.1,50,000 வரை எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்கள் கணிப்பு: "ஈரான் - இஸ்ரேல் மோதல் நீண்டால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் 1 லட்சம் ரூபாயைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
கச்சா எண்ணெய்: ஹார்முஸ் ஜலசந்தியும்... எரியும் விலையும்!
ஈரான் மிரட்டுவது போல ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முடி உள்ளது, இது உலக நாடுகளின் கழுத்தை நெரிப்பதற்குச் சமம்.
ஏன் இந்த ஜலசந்தி முக்கியம்?
உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% முதல் 25% வரை இந்த குறுகிய கடல் பகுதி வழியாகத்தான் நடக்கிறது. சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் இதைக் கடந்துதான் வரவேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை: தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 120 டாலரைத் தாண்டியுள்ளது. இது தொடர்ந்தால், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.150 முதல் ரூ.170 வரை உயரக்கூடும்.
பணவீக்கம்: எரிபொருள் விலை உயர்ந்தால், காய்கறி முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை வரை அனைத்தும் ராக்கெட் வேகத்தில் உயரும். இது நடுத்தர வர்க்கத்தினரின் வயிற்றில் அடிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் நிலை என்ன?
மத்திய அரசு தற்போது 'வெயிட் அண்ட் வாட்ச்' (Wait and Watch) பாணியைக் கடைப்பிடித்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், போரின் தீவிரம் அதிகரித்தால் நிலைமை கைமீறிப் போகும் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பல லட்சம் தமிழர்கள் அனுப்பும் 'ரெமிட்டன்ஸ்' (Remittance) பணம் பாதிக்கப்படுமா? என்ற கவலையும் எழுந்துள்ளது. போர் நீடித்தால், உலகப் பொருளாதாரம் பெரும் மந்தநிலையை (Recession) நோக்கித் தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications