Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எவ்ளோ கிளீன் செய்தாலும் வீடுகளில் தூசி, துரும்பு இருக்கிறதா? ஸ்பைடர் செடிகளை வைங்க! ஆல் கிளியர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்பைடர் செடி கேள்விப்பட்டிருக்கீங்களா? இது ஒரு இன்டோர் பிளான்ட். எதற்காக வளர்க்கப்படுகிறது தெரியுமா?

சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பது அபூர்வமாக உள்ளது. ஒரு கட்டத்தில் டெல்லியில் காற்று மாசால் பலர் அவதியடைந்தனர். செயற்கை சுவாச சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தினர்.

Do you know about the spider plant which gives clean air

இந்த உடம்பில் காற்று என்ற ஒன்று இல்லை என்றால் உயிரற்ற பொருளாகிவிடுவோம். மூச்சு நின்னு போச்சுன்னா அவ்வளவுதான். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்றில்லை , எல்லாருக்கும் 6 அடி நிலம் கூட சொந்தம் கிடையாது.

உடலில் நோய் ஏற்படாமல் இருக்க சுத்தமான காற்று முக்கியம் என்கிறார்கள். அது போல் நுரையீரலை நன்கு இயங்க வைக்கவும் சில மூச்சு பயிற்சிகளை பலர் செய்கிறார்கள். வீடுகளில் மரம் வளர்த்தால் அவை நமக்கு சுத்தமான காற்றை கொடுக்கும் என இருந்தது.

ஆனால் இன்று மரம் வளர்க்க கால் காணி இடம் கூட விட்டு வைக்காமல் அத்தனையையும் கட்டடமாக்கி விடுகிறோம். இதனால் செடி வளர்ப்பது என்பது அரிதாகிவிட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடிகளின் பக்கவாட்டு கட்டை எனப்படும் சுவர்களில் தொட்டியை வைத்து செடிகளை வளர்த்து வருகிறோம்.

அது போல் தற்போது சுத்தமான காற்றை கொடுக்கும் இன்டோர் பிளாண்ட்களும் வந்துவிட்டன. அதில் முக்கியமானது ஸ்பைடர் பிளான்ட். இந்த செடிகள் பார்ப்பதற்கு ஊசி ஊசியாக இலைகள் இருக்கும். பார்க்கவே அழகாக இருக்கும். ஆனால் இது ஆரோக்கியத்தையும் தரும். இந்த செடிகள் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவை.

இலைகள் மெல்லியதாகவும் அதில் பச்சை நிறங்களுக்கு இடையே வெள்ளை நிறத்தில் கோடுகள் இருக்கும். கண்களை கவரக் கூடியது. இந்த செடிகளை வீடுகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். வீடுகளில் செடி வளர்த்தால் தூசிகள் இல்லாமல் இருக்கும். ஏனெனில் இருக்கும் தூசிகளை செடிகள் உறிஞ்சிகொள்ளும் என்கிறார்கள்.

தூசிகளை நீக்கி சுத்தமான காற்றை அளிப்பதில் இந்த ஸ்பைடர் செடிகள் சிறந்து விளங்குகிறது. இது காற்றில் உள்ள டொலுயூன், கார்பன் மோனாக்ஸைடு, சைலீன், ஃபார்மால்டிஹைடு போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை அகற்றுகிறது. இது பார்ப்பதற்குத்தான் சிறிய செடியாக இருக்கும். ஆனால் மரங்களுக்கு இணையாக இவை ஆக்ஸிஜனை தரும்.

இயற்கையின் ஆக்ஸிஜன் சிலிண்டர் என கூறலாம். வீடுகளுக்குள் செடியை வளர்த்தால் அதை நாம் பராமரிக்கும் போது மனதிற்கு அமைதியை தருகிறது. மனச்சோர்வை நீக்குகிறது. வீட்டில் செல்பிராணிகளை வளர்ப்போரும் இந்த செடிகளை எந்த தடையும் இன்றி வளர்க்கலாம். இந்த செடிகளை மருத்துவமனைகளில் நாம் பார்த்துள்ளோம்.

இவை நோயை விரைந்து குணமாக்கும் தன்மை கொண்டவை. இந்த செடிகளுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. சூரிய ஒளி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி , இவற்றை வளர்க்கலாம். இந்த செடிகள் வறட்சியை தாங்கும். என்பதால் வாரத்திற்கு இரு முறை சிறிதளவு தண்ணீர் விட்டாலே போதுமானது. இந்த சிலந்தி செடிகள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வாழும் என்கிறார்கள்.

மணி பிளாண்ட்டுடன் கூட இந்த செடியை வளர்க்கலாம். வீட்டில் ஈரப்பதத்தை அதிகரிக்கும். இந்த செடிகள் விஷத்தன்மை கொண்டவை அல்ல என்பதால் குழந்தைகள் இருக்கும் வீடுகளிலும் வளர்க்கலாம். பூனைகளுக்கு இந்த செடிகள் மிகவும் பிடிக்குமாம். இவற்றுடன் அவை விளையாடும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+