Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கத்தை கத்தையா உதிருதா தலைமுடி.. கறிவேப்பிலையுடன் "இதை" மட்டும் சேருங்க.. கருகருன்னு வளரும் தலைமுடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமுடி உதிர்தலுக்கு நிரந்தர தீர்வு பலருக்கும் கிடைப்பதில்லை.. முழுக்க முழுக்க ரசாயனங்களை நம்பாமல், எளிய முறையில் வீட்டிலேயே இதற்கு தீர்வு காணலாம்.
தலைமுடி உதிர பல காரணங்கள் இருக்கலாம்.. உப்பு தண்ணீரில் குளிப்பது, பிளீச்சிங் கலந்த தண்ணீர் உபயோகித்தல், அதிக நேரம் தலை ஈரமாக இறுக்கமாக சுற்றி வைத்தல், தலையில் சிறு கட்டிகள் வருதல், எண்ணெய் பசை போன்றவை காரணமாக இருக்கலாம்.

வெள்ளைப்போக்கு: ரத்த சோகை, ரத்த சம்பந்த வியாதி உள்ளவர்களுக்கு முடி அடிக்கடி கொட்டும்.. உடலில் இரும்புச்சத்து இல்லையென்றாலும் முடி உதிரும்.. அதிக வெள்ளைப்போக்கு, ஒழுங்கற்ற ரத்த போக்கு, மகப்பேறு காலங்களுக்கு பிறகு ஏற்படும் ரத்த இழப்புகளாலும் முடி கொட்டும்.. அதேபோல, பொடுகு தொல்லை, அதிக மன உளைச்சல், போதுமான அளவு தூக்கமின்மை, உடலில் சூடு அதிகமாகுதல் போன்றவைகளும் காரணமாக உள்ளன.

Do you know Excellent Health benefits of Curry Leaves and What are the Super Tips for Healthy Hair Growth

சத்தான உணவு, முறையான தூக்கம், போதுமான அளவுக்கு தண்ணீர் குடிப்பது இவையெல்லாம்தான், இதற்கு ஒரே தீர்வு என்பதை மறுக்க முடியாது.. அந்தவகையில், முருங்கைகீரையைவிட நன்மை தரக்கூடிய கீரைகள் வேறு இருக்க முடியாது.

கருவேப்பிலை: இந்த கீரையின் பொடியையும், கருவேப்பிலை பொடியையும் சமமாக எடுத்து, ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும். பிறகு, ஒரு டம்ளர் மோர் குடிக்க வேண்டும். இப்படியே 6 மாதம் செய்து வந்தால் தலைமுடி உதிர்வது நின்றுவிடுவதுடன், தலைமுடியும் அடர்த்தியாக வளருமாம். வெறுமனே, முருங்கையிலையில் சூப் போல செய்து சாப்பிடலாம்.. கறிவேப்பிலையை துவையலாக பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய்கள்: கருஞ்சீரகம், வெந்தயம் இரண்டையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்து கழுவி, இரவெல்லாம் ஊறவிட வேண்டும். மறுநாள் காலையில், இதனுடன் 3 நெல்லிக்காய்களை விதை நீக்கி சேர்த்து மைய அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, அந்த விழுதினை மெல்லிய துணியில் வடிகட்டி, அந்த சாற்றினை விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தாலே முடி கொட்டுவது நின்றுவிடும்.

அவுரி இலை: ஒருவேளை உங்கள் தலைமுடி கருப்பாக மாற வேண்டுமானால், அவுரி இலைகளை வைத்து வீட்டிலேயே பொடி ஒன்றை தயாரிக்கலாம். அதாவது, மருதாணி, நெல்லிமுள்ளி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை இந்த நான்கையும் சும அளவு எடுத்து, காயவைத்து பொடித்து கொள்ள வேண்டும். அதேபோல, அவுரி இலையையும் நிழலில் காய வைத்து பவுடர் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது, அவுரி இலை தவிர மற்ற அனைத்து பொருட்களையும், டீ டிக்காஷனில் இரவெல்லாம் ஊறவிட்டு, அதை மறுநாள் காலையில் தலைக்கு தேய்த்து ஒரு மணி நேரம் ஊற விடவேண்டும்.

பிறகு, அவுரி இலையை தண்ணீரில் கலந்து, அதையும் தலைக்கு தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, இப்போது தலையை அலச வேண்டும். வாரம் ஒருமுறை, பிறகு மாதம் 2 முறை, பிறகு 2 மாதம் ஒருமுறை என இப்படி செய்து வந்தால், முடி நிறம் கருமையாக மாற தொடங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+