Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைவலி உயிர் போகிறதா.. ஸ்டிராங்கா டீ குடித்தும் பயனில்லையா? இந்த யோகாவை செய்து பாருங்க! ஆனால் ஒன்று!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைவலி உயிர் போகிறதா, கவலையை விடுங்க. இந்த யோகாசனத்தை செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

எந்த வலியை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் தலைவலி என்பதை மட்டும் தாங்கி கொள்ளவே முடியாது. இதைத்தான் தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தாதான் தெரியும் என்பார்கள்.

Do you know how to get relief from headache?

தலைவலியில் நிறைய வகைகள் உள்ளன. ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டால் ஏற்படும் தலைவலி, கண் பார்வை பிரச்சினை என்றால் அது ஒரு மாதிரியான தலைவலியை கொடுக்கும். அது போல் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி வேறு இருக்கிறது.

இதற்கெல்லாம் தீர்வு தேடி தேடி பலர் ஓய்ந்தே போயிருப்பார்கள். தலைவலி வந்தால் பலர் ஆங்கில மாத்திரைகளை சாப்பிடுவார்கள். டீ வைத்து குடித்து பார்ப்பார்கள். பிறகு தலைவலிக்கென தைலத்தையும் தடவி பார்ப்பார்கள். தலையில் ஒத்தடம் கொடுப்பது போன்ற விஷயத்தையும் செய்து பார்ப்பார்கள். ஆனாலும் அவர்களுக்கு தலைவலியே போகாது.

இதனால் அவர்கள் அவதிப்படுவதோடு உடன் இருப்போரையும் சிலர் பகீர் கிளப்பி வருவார்கள். தலைவலிக்கு முக்கிய காரணம் டென்ஷனாக கூட இருக்கும் என்கிறார்கள். தொடர்ந்து மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்பது நல்லதல்ல. இதனால் யோகா செய்வது போன்ற செயல்களை செய்யலாம்.

அந்த நேரத்திற்கு தலைவலிக்கு மருத்துவம் பார்த்துவிட்டு பிறகு அடிக்கடி வந்தால் மருத்துவரிடம் போய் ஏன் இப்படி ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சில யோகாசனங்களை செய்தாலும் இந்த தலைவலி நீங்கும். இதற்கு சில யோகாசனங்களை பார்க்கலாம். ஆனால் இவற்றை ஒரு யோகா ஆசிரியர் அல்லது பயிற்றுநரின் உதவியுடன் செய்ய வேண்டுமே தவிர தானாக எதையும் செய்ய கூடாது.

முதல் யோகா பாலாசனம்- குழந்தை போஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் இருக்கக் கூடிய பதற்றத்தைப் போக்கி உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. தோள்பட்டையில் உள்ள முடிச்சுகளை அவிழ்ப்பதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக்கும். அடுத்தது உத்தனாசனம்- இந்த ஆசனம் தலை கீழாக கவிழ்வதால் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் எளிதாக தலைவலி சரியாகும்.

அடுத்தது சேதுபந்தாசனம்- பிரிட்ஜ் போஸ் என்பார்கள். இது மன அழுத்தத்தை குறைத்து பதற்றத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. தலைவலிக்கு இந்த ஆசனம் நிவாரணத்தை கொடுக்கும் நிலையில் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்புகளை வெளியேற்றவும் உதவுகிறது. தொப்பை போடாமல் பாதுகாக்கிறது.

அது போல் பச்சிமோத்தாசனம் என்ற ஒரு யோகாசனம் உள்ளது. இந்த போஸ் மூலம் முதுகுத்தண்டை விரிவடைகிறது. இதனால் தலை மற்றும் கழுத்து பகுதியில் உள்ள தசைகளில் காணப்படும் பதற்றத்தை விடுவிக்கிறது. இதனால் மூலமும் தலைவலியிலிருந்து விடுபடலாம். அது போல் பூனை போஸ் செய்தாலும் தலைவலியிலிருந்து விடுபடலாம். நாய் போல் நிற்கும் போஸ் மூலமும் தலைக்கு ரத்தவோட்டம் அதிகரிப்பதால் தலைவலி குறையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+