அத்திக்காய் காய் காய் காய்..! குடிப்பழக்கத்தால் கல்லீரலில் பிரச்சினையா? அதான் அத்திக்காய் இருக்கே!
சென்னை: அத்திப்பழத்தின் நன்மைகள் என்னவென நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் அத்திக்காயின் ஆரோக்கிய குறிப்புகள் பெரும்பாலானோருக்கு தெரியாது. இந்த காயால் வயிற்றுக்கு ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.
அத்திக்காயில் பலர் ஊறுகாய் போடுவார்கள். இந்த அத்திக்காயை வாங்கி வந்து அவற்றை 4 துண்டுகளாக போட்டு அதன் நடுவே இருக்கும் விதைகளை நீக்க வேண்டும்.

அத்திக்காயின் விதை பகுதியில் பூச்சி, புழுக்கள் இருக்கும். எனவே கவனமாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம்.
இந்த அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து உள்ளிட்டவை நிறைந்திருக்கின்றன. இந்த காய் மலச்சிக்கலை நீக்கும். வெள்ளைப்படுதலை நிறுத்திவிடும். சீதபேதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அத்திக்காயை சாப்பிட்டால் அது குணமடையச் செய்யும்.
வாயுவை போக்கும், ரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. உடலில் உள்ள புண்களை ஆற்றும். இந்த காய் வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தாக அமைகிறது. அத்திக்காய் குளிர்ச்சியை தரும். இது பத்தியத்திற்கு ஏற்ற மருந்தாலும். மாதந்தோறும் ஒரு நாளாவது அத்திக்காயை கொண்டு அவியல் செய்து சாப்பிட வேண்டும்.
குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை இந்த அத்திக்காய் குணமாக்கும். மலை கிராமங்களில் வசிப்போரிடம் இந்த காயில் செய்யப்பட்ட ஊறுகாய் கிடைக்கும். சாப்பிடுவதற்கு ஆவக்காய் போல் இருக்கும். ஆனால் துவர்ப்பு சுவையுடையது.
உடல் எடை குறைய வேண்டும் என்றால் அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட வேண்டும். இது பசி உணர்வை தூண்டாது. நீரிழிவு நோயாளிகளும் இந்த அத்திப்பழத்தை சாப்பிடலாம். இதனால் ரத்த சர்க்கரையின் அளவு ஏறாது. அத்திப்பழம் பல் ஈறு பிரச்சினைகளை குணமாக்கும். இது போல் பல் வலியும் குறையும்.












Click it and Unblock the Notifications