Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட் கறிவேப்பிலை.. இந்த ஒரே பொடி போதும்.. நீரிழிவு நோயாளிகளின் எவர்கிரீன் "கிப்ட்" கறிவேப்பிலை இலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கறிவேப்பிலை உடலுக்கு நல்லதுதான் என்றாலும், சர்க்கரை நோயாளிகள் இந்த கறிவேப்பிலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னென்ன தெரியுமா?

கறிவேப்பிலை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனாலேயே, சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் இந்த கறிவேப்பிலை என்று சொல்லலாம்.

Do you know the Excellent Health benefits in Curry Leaf and Can Diabetic Patients take Curry Leaves Powder

காரணம், இந்த கறிவேப்பிலைகள், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்.. கறிவேப்பிலையில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. கொலஸ்ட்ரால் அளவையும் இந்த இலை குறைக்கிறது..

வடிவங்கள்: இந்த கறிவேப்பிலைகளை, எந்த வடிவில் உணவாக எடுத்து கொண்டாலும் அது நன்மையே தரக்கூடியது.. காய்ந்து போன கறிவேப்பிலையாக இருந்தாலும் சரி, அல்லது பச்சை கறிவேப்பிலையாக இருந்தாலும், ஒருபோதும் இதன் தன்மைகளும், சத்துக்களும் மாறுவதில்லை.. ஆனால், ரத்த சர்க்கரை குறைவு பண்புகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை மென்று சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபார்மாசூட்டிகல் சயின்ஸில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டிருந்தது. அதில், கறிவேப்பிலையில் ரத்த சர்க்கரைக் குறைப்பு எதிர்ப்பு பண்புகள் இருப்பதாகவும, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தது.

அந்த அளவுக்கு கறிவேப்பிலையிலுள்ள நார்ச்சத்தானது சர்க்கரையின் அளவு மிகவும் சீராக வைத்திருக்கிறது. நார்ச்சத்து அதிகம் கிடைக்கும்போதும், சர்க்கரையின் அளவை எப்பொழுதுமே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது..

பாஸ்பரஸ்: கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின்கள் போன்ற கறிவேப்பிலையில் இருப்பால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.. நீரிழிவு நோயாளிகள் எப்படி பயன்படுத்தலாம்?

தினமும் 10 கறிவேப்பிலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம்.. அல்லது பொடி செய்து சாப்பிடலாம். கறிவேப்பிலைகளை கழுவி வெயிலில் காய வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை 3-4 கிராம் அளவு காலை நேரத்தில் எடுத்துகொள்ளலாம். இதனால், கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

தவிர்க்கக்கூடாது : 30 நாட்கள் தொடர்ந்து இந்த பொடியை சாப்பிட்டு வந்தாலே நீரிழிவு குறையும் என்கின்ற ஆராய்ச்சிகள். முக்கியமாக, கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் (HbA1c) அளவு குறைகிறாம்.. யூரியா அளவும் குறைகிறதாம்.. யூரிக் அமிலமும் குறைகிறதாம்.. கிரியேட்டினின் அளவும் குறைகிறதாம்.. அதனால்தான், நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கவே கூடாத மிக முக்கிய உணவுப்பொருள் கறிவேப்பிலையாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+