முருங்கை இலை.. முருங்கைக்காயின் விதைகள்.. அதென்ன முருங்கை விதை எண்ணெய்? இது தெரியாம போச்சே.. சூப்பர்
சென்னை: முருங்கைக்கீரையை பற்றி தெரிந்த அளவுக்கு முருங்கை எண்ணெய்யை பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை.. முருங்கை எண்ணெய் எப்படி தயாரிக்கப்படுகிறது? இதன் பலன்கள் என்னென்ன தெரியுமா?
முருங்கையின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுவதுதான் முருங்கை எண்ணெய்.. இந்த எண்ணெய் கடைகளில் கிடைக்கிறது என்றாலும், இதை நாமே வீட்டில் தயாரிக்கலாம்.. எப்படி தயாரிப்பது தெரியுமா?

முருங்கை விதைகள்: முருங்கைக்காயில் உள்ள விதைகளை மட்டும் வெளியே எடுத்து, வாணலியில் கொட்டி வறுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த வறுத்த விதைகளை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும். அப்போது விதைகளிலிருந்து எண்ணெய் வெளியேற துவங்கும்போது, அடுப்பை குறைத்து வைத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரவர, அவைகளை தனியாக சேமித்து வைத்து வேண்டும். பிறகு மொத்த எண்ணெய்யையும், அப்படியே பாத்திரத்தில் 3 நாட்களுக்கு விட்டுவிட வேண்டும். இப்போது எண்ணெய் மட்டுமே அடியில் தங்கியிருக்கும். இந்த எண்ணெய்யையுடன், பாதாம் எண்ணெய் கலந்து பயன்படுத்த வேண்டும். வெறும் முருங்கை எண்ணெய்க்கு பதிலாக, பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தினால் இன்னும் நன்மை கிடைக்கும்.
எண்ணெய்: சருமத்துக்கு பாதுகாவலன் இந்த எண்ணெய் என்றே சொல்லலாம்.. தலைமுடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.. தலைமுடி உதிர்தல், பலமில்லாத கூந்தல், தலைமுடி வறட்சி போன்ற அத்தனை கேச கோளாறுகளையும் இந்த எண்ணெய் நீக்குகிறது. அதனால், வாரம் 2 முறை, தலைக்கு மசாஜ் செய்து குளித்து வரலாம்..
பொடுகு: பொடுகு தொல்லை இருப்பவர்களும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.. முருங்கை விதை எண்ணெய்யை, தலைமுடியின் மயிர்க்கால்கள் முதல் நுனிவரை தடவி விடுவதன் மூலம் பொடுகு பிரச்சனையை எளிதாக தவிர்க்கலாம்.. இந்த எண்ணெய்யில் புரதம், நிறைவுற்ற கொழுப்புகள் அடங்கியிருக்கின்றன.. அதனால், சமையலிலும் பயன்படுத்தலாம்.
அதேசமயம், இந்த முருங்கைக்காயின் விதைகளையும் சமையலில் நாம் தவிர்க்க கூடாது.. இந்த விதைகளில் ஏகப்பட்ட மருத்துவ குணத்தை கொண்டிருக்கிறது.. ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் A, C, B போன்ற இந்த விதைகளில் நிறைந்துள்ளன.. அதுமட்டுமல்ல, 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் விதைகளில் அடங்கியிருக்கின்றன. அதனால்தான், லேகியம் தயாரிப்புகளில் இந்த விதைகளை மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்.
விதைகள்: இந்த விதைகளை காயவைத்து பொடி செய்து வைத்து கொண்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உபயோகிக்கலாம்.. சிலருக்கு ஏற்படும் ஆண்மை கோளாறுகளை தீர்க்க, பெரிதும் கொடுப்பது முருங்கையின் விதைகள்தான்.. இந்த விதைகளை நெய்யில் வறுத்து தூள் செய்து, பாலுடன் காய்ச்சி குடித்தால், விந்தணுக்கள் அதிகரிக்குமாம்.. நரம்புகளும் வலுப்பெறும் என்கிறார்கள்.. அதனால், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த முருங்கை விதைகளை மருந்தாக சாப்பிடலாம்..
அதேபோல, சர்க்கரை நோயாளிகள், இந்த பொடியில் மிளகு சேர்த்து சூப் போல தயாரித்து குடிக்கலாம்.. கால்சியம், இரும்புச்சத்து அதிகமாக கிடைக்கும்.. இருதயத்தை சுற்றி படிந்துள்ள கொழுப்புகளும் நீங்கும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications