அக்கு அக்கா உதிருதா முடி.. இஞ்சி இருக்கா? அப்ப இந்த சூப்பர் டிப்ஸை பாருங்க..கருகருன்னு தலைமுடி வரும்
சென்னை: தலைமுடி உதிர்தல் பெரும்பிரச்சனையாக இருந்து வரும்நிலையில், ஒருசில டிப்ஸ்களை நாம் கையாண்டால், முடி உதிர்தலை வெகுவாக குறைக்கலாம்.. தலைமுடியும் வளர துவங்கும்.
தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் சூடு செய்து தலையில் தேய்த்து வந்தாலே, தலைமுடியின் வேர் உறுதியாகும்.. முடி உதிர்வும் கட்டுக்குள் வரும். தேங்காய்ப்பால் எடுத்து காயவைத்து வெட்டிவேர், வெள்ளைமிளகு இரண்டையும் கலந்து தலைக்கு தேய்த்து வந்தாலும் முடி கொட்டுவது உடனடியாக நிற்க துவங்கும்.

நெல்லிக் காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும். முட்டையின் வெள்ளைக்கரு, சிறுவால்மிளகு இரண்டையும் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தாலும், முடி வேருடன் கொட்டுவதை தடுக்கும்.
வெந்தயம்: வறண்ட தலைமுடி இருப்பவர்கள், நெல்லிக்காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளித்து வரலாம். இதனால் தலைமுடி மென்மையாகும்.. கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். அல்லது ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய்யை எழுத்து, தலைக்கு மசாஜ் செய்தாலும், பலன் கிடைக்கும்.
வெள்ளைப்பூண்டு, இஞ்சி இரண்டுமே உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் பெஸ்ட் மருந்தாகிறது. இந்த இரண்டையுமே உரித்து எடுத்து கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தை போட்டு, நல்லெண்ணெய்யும் விட்டு, மொத்தமாக சூடு செய்ய வேண்டும்.. நுரை பொங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடலாம்.
வெள்ளைப்பூண்டு: இரவு தூங்க செல்லும்போது, தலைக்கு தேய்த்துவிட்டு மறுநாள் காலையில் குளித்தால் தலைமுடி உதிராது.. கேசமும் ஆரோக்கியமாகும். வெள்ளைப்பூண்டு, இஞ்சி சேர்ப்பதால், ஒருவித வாடை வந்தாலும், தலைமுடிக்கு ஆரோக்கியமான எண்ணெய் கிடைக்கும்.
அல்லது செம்பருத்தி இலைகளையும், வேப்பிலைகளையும் சமபங்காக அரைத்து, துணியில் கட்டி பிழிந்து கொள்ள வேண்டும். அந்த சாற்றினை தலையில் தேயத்து 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால்,தலைமுடி உதிர்வது நிற்கும்.
சூப்பர் ஆயில்: அல்லது வீட்டிலேயே ஒரு சூப்பரான எண்ணெய் தயாரிக்கலாம். இதற்கு ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் இந்த மூன்றையும் தலா 100 மி.லி. எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதில் 50 சொட்டு ரோஸ் மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பிரஞ்சி இலை ஆயில் (பே ஆயில்), சிடர்வுட் ஆயில் போன்றவற்றையும் கலந்து, மொத்தத்தையம் அப்படியே 1 வாரத்துக்கு வைத்து விட வேண்டும்.
1 வாரம் கழித்து இந்த எண்ணெய்யை தினமும் இரவில் தடவி, மறுநாள் காலையில் குளித்து வந்தாலே தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.. தலைமுடியும் கருகருவென வளரும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications