அக்கு அக்கா உதிருதா முடி.. இஞ்சி இருக்கா? அப்ப இந்த சூப்பர் டிப்ஸை பாருங்க..கருகருன்னு தலைமுடி வரும்
சென்னை: தலைமுடி உதிர்தல் பெரும்பிரச்சனையாக இருந்து வரும்நிலையில், ஒருசில டிப்ஸ்களை நாம் கையாண்டால், முடி உதிர்தலை வெகுவாக குறைக்கலாம்.. தலைமுடியும் வளர துவங்கும்.
தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் சூடு செய்து தலையில் தேய்த்து வந்தாலே, தலைமுடியின் வேர் உறுதியாகும்.. முடி உதிர்வும் கட்டுக்குள் வரும். தேங்காய்ப்பால் எடுத்து காயவைத்து வெட்டிவேர், வெள்ளைமிளகு இரண்டையும் கலந்து தலைக்கு தேய்த்து வந்தாலும் முடி கொட்டுவது உடனடியாக நிற்க துவங்கும்.

நெல்லிக் காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும். முட்டையின் வெள்ளைக்கரு, சிறுவால்மிளகு இரண்டையும் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தாலும், முடி வேருடன் கொட்டுவதை தடுக்கும்.
வெந்தயம்: வறண்ட தலைமுடி இருப்பவர்கள், நெல்லிக்காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளித்து வரலாம். இதனால் தலைமுடி மென்மையாகும்.. கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். அல்லது ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய்யை எழுத்து, தலைக்கு மசாஜ் செய்தாலும், பலன் கிடைக்கும்.
வெள்ளைப்பூண்டு, இஞ்சி இரண்டுமே உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் பெஸ்ட் மருந்தாகிறது. இந்த இரண்டையுமே உரித்து எடுத்து கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தை போட்டு, நல்லெண்ணெய்யும் விட்டு, மொத்தமாக சூடு செய்ய வேண்டும்.. நுரை பொங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடலாம்.
வெள்ளைப்பூண்டு: இரவு தூங்க செல்லும்போது, தலைக்கு தேய்த்துவிட்டு மறுநாள் காலையில் குளித்தால் தலைமுடி உதிராது.. கேசமும் ஆரோக்கியமாகும். வெள்ளைப்பூண்டு, இஞ்சி சேர்ப்பதால், ஒருவித வாடை வந்தாலும், தலைமுடிக்கு ஆரோக்கியமான எண்ணெய் கிடைக்கும்.
அல்லது செம்பருத்தி இலைகளையும், வேப்பிலைகளையும் சமபங்காக அரைத்து, துணியில் கட்டி பிழிந்து கொள்ள வேண்டும். அந்த சாற்றினை தலையில் தேயத்து 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால்,தலைமுடி உதிர்வது நிற்கும்.
சூப்பர் ஆயில்: அல்லது வீட்டிலேயே ஒரு சூப்பரான எண்ணெய் தயாரிக்கலாம். இதற்கு ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் இந்த மூன்றையும் தலா 100 மி.லி. எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதில் 50 சொட்டு ரோஸ் மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பிரஞ்சி இலை ஆயில் (பே ஆயில்), சிடர்வுட் ஆயில் போன்றவற்றையும் கலந்து, மொத்தத்தையம் அப்படியே 1 வாரத்துக்கு வைத்து விட வேண்டும்.
1 வாரம் கழித்து இந்த எண்ணெய்யை தினமும் இரவில் தடவி, மறுநாள் காலையில் குளித்து வந்தாலே தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.. தலைமுடியும் கருகருவென வளரும்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications