பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே! அற்புதம்! டெங்கு, மலேரியா, சிக்குன் குனியாவுக்கு அருமருந்து!
சென்னை: பாரிஜாத பூவை தேவலோகத்து மலர் என அழைப்பது வழக்கம். அப்படி அழைக்கும் இந்த பூவின மருத்துவ குணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
பாரிஜாதப்பூ இதன் இதழ்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் காம்பு பகுதி ஆரஞ்ச் நிறமாக இருக்கும். இந்த பூ வாசனை கொண்டது. இது பூஜைக்கு மட்டும்தான் பயன்படுத்துவர். அவ்வளவாக தலையில் வைத்துக் கொண்டு பார்த்ததில்லை.

மேலும் இந்த பூவுக்கு இரவு மல்லி, பவளமல்லி என்ற வேறு பெயர்களும் இருக்கின்றன. இந்த பூவுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பூ மட்டுமல்ல, இதன் மரமும், இலைகளும் அத்தனை மருத்துவ குணங்கள் கொண்டது.
இந்த பூவானது இரவு நேரத்தில் பூக்கக் கூடியது என்பதால்தான் இதை இரவு மல்லி என அழைக்கிறார்கள். இந்த பூவின் சாற்றை தேனுடன் கலந்து குடித்தால் வறட்டு இருமல் பிரச்சினைகள் நீங்கிவிடும். இந்த பூவின் மரத்தின் பட்டையையும் இலையையும், பூவையும் கசாயமாக குடித்து வந்தால் மூட்டு வலி பஞ்சாய் பறந்துவிடும்.
அது போல் மன ரீதியிலான பிரச்சினைகளை குணப்படுத்த இந்த பூ பயன்படுகிறது. அரோமாதெரபி என இயற்கை மருத்துவத்தில் சொல்வார்கள். இதன் எண்ணெய்யை பயன்படுத்துவதால் மன அழுத்தமும் பதற்றமும் குறையும். இந்த பூவின் வாசத்தின் மூலம் மூளையில் செராட்டோனின் நன்றாக சுரக்கும். இதனால் மனம் அமைதியாகும்.
அரிப்பு , அலர்ஜிக்கு இந்த பூவினால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்யை தடவி வந்தால் அவை நீங்கும். இந்த பாரிஜாத பூக்கள் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும். சர்க்கரைநோய்க்கு அருமருந்து. தலைமுடி வளர்ச்சிக்கு இந்த பூக்கள் உதவுகிறது. அது போல் தலையில் முடி உதிர்வையும் தடுத்து பேன், பொடுகு தொல்லைகளை நீக்குகிறது. பவளமல்லியின் தண்டு மலேரியாவுக்கு தீர்வு அளிக்கும்.
பவளமல்லியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் காய்ச்சலை குறைக்கிறது. மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களை குணப்படுத்துகிறது. டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சலின் போது குறையும் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பல் சம்பந்தமான நோய்களுக்கும் பிரசவ காலத்தில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் இது உதவுகிறது. மேலும் குமட்டலை நீங்கி புழு தொற்றுகளில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications