Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருங்கை கீரை, நாட்டு கோழி முட்டையை 48 நாள் சாப்பிட்டு பாருங்க! சூப்பர் மேஜிக்! 100 யானை பலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கைக் கீரையையும் நாட்டுக் கோழி முட்டையையும் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் அதன் பயன்கள் மேஜிக் போன்ற உணர்வை கொடுக்கும்.

முருங்கைக் கீரை- கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மையை கொடுக்கும். அதிலும் முருங்கைக் கீரை உடலுக்கு தேவையான இரும்பு சத்தையும் நார்ச்சத்தையும் சேர்த்தே கொடுக்கும். இது நூறு யானை பலத்தை கொடுக்கும்.

Do you know the uses of Murugakeerai leaves?

முருங்கை இலையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, புரதம், இரும்பு சத்து, பொட்டாசியம் உள்ளிட்டவை உள்ளது. சாப்பிடும் போது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இந்த இலைகளை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினந்தோறும் சாப்பிட குடல் பூச்சிகள் அழிந்துவிடும்.

குழந்தை பிறந்த தாய்மார்கள், முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள தாய்ப்பால் அதிகம் சுரக்கும். உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் 15 மி.கி. முருங்கை கீரை சாறை தேன், 10 மிளகுகளை பொடித்து சாப்பிட்டு வர வேண்டும். நரம்பு தளர்ச்சி. நரம்பு கோளாறுகளையும் குறைக்கும். நீண்ட நேரம் சோர்வடையாமல் உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

உடல் சூட்டை தணிக்கும். சிறுநீரை பெருக்கும். சர்க்கரை நோயாளிகள் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் அதிக பலன்கள் கிடைக்கும். குறைந்த செலவில் அதிக சத்துகள் கிடைக்கும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கைக் கீரை உணவு மிகவும் பலனை அளிக்கும். விந்தணு சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்யும்.

முருங்கைகீரையை நாட்டு கோழி முட்டை, சின்னவெங்காயம் , தேங்காய் எண்ணெய் கொண்டு பொரியல் செய்து 48 நாட்களுக்கு அதாவது ஒரு மண்டலம் சாப்பிட்டால் ரத்தம் சுத்தகரிக்கும், ரத்தம் விருத்தியாகும். இடுப்பு எலும்புகள் கழுத்து எலும்புகளும் வலுபெறும். ஆண்மை பிரச்சினைகள் நீங்கும். உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் சக்தி முருங்கை கீரைக்கு உண்டு.

முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை நோய் குணமடையும். பற்கள் உறுதி அடைய முடி நீளமாக வளர இந்த கீரை அவசியம். வாய்ப்புண்ணுக்கும் வயிற்று புண்ணுக்கும் அவசியமான ஒன்று. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மூளையின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

ஆஸ்துமா, மார்பு சளி, சைனஸ் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை இலையை சூப் வைத்து குடித்து வரலாம். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். கர்ப்பிணிகள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய கீரை. முருங்கை இலை சாறுடன் எலுமிச்சை கலந்து தடவினால் முகப்பருக்கள் மறையும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது.

உங்கள் சருமத்தில் உள்ள தொற்றுகளை நீக்கும். வாரத்தில் இரு நாட்களாவது இந்த முருங்கை கீரையை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். மலச்சிக்கல், பித்த மயக்கம், கண் நோய் உள்ளிட்டவை குணமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+