பிரிட்ஜில் வைக்கவே கூடாத அந்த 4 பொருட்கள் என்னென்ன தெரியுமா? நீங்கள் அடிக்கடி செய்யும் தப்புதான்!
சென்னை: பிரிட்ஜ் இருக்கிறது என்பதற்காக எந்த பொருளையும் அதில் வைத்துவிட முடியாது. குறிப்பிட 4 பொருட்களை வைத்தால் அது விஷமாக மாறும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
பிரிட்ஜ் எனும் குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்தார்கள். இதனால் கணவன்மார்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அங்கலாய்க்கிறார்கள். பிரிட்ஜ் என்பது ஒரு பொருள் வாடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

ஐஸ் கட்டியை சேமிக்க உதவுவது போன்றவற்றிக்கு ஆகும். எனவே பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட வகைகளை வைக்கலாம். அதிலும் கடையில் இருந்து வாங்கி வந்ததும் அப்படியே வைத்துவிடக் கூடாது.
அவற்றை கழுவி ஈரத்தை துடைத்துத்தான் வைக்க வேண்டும். அழகாக கவர்களில் சுற்றி வைக்கலாம். அதற்கென மார்க்கெட்டுகளில் வலை போன்ற பைகள் எல்லாம் வந்துவிட்டன. இவற்றை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அந்த காலங்களில் பிரிட்ஜெல்லாம் இல்லை.
நம் முன்னோர்கள் நாம் வைக்கும் பால், மோர், மாவு, காய், பழம் ஆகியவற்றை பிரிட்ஜில் வைக்காமல்தான் பாதுகாத்தனர். ஆனால் இன்று பிரிட்ஜ் இல்லாவிட்டால் கை உடைந்தது போல் ஆகிவிடுகிறது. தற்போது கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். இதனால் தினமும் பரபரப்பாக இயங்கி வேண்டியிருக்கிறது.
இதனால் சிலர் ஒரு குழம்பை இரு நாட்களுக்கு சேர்த்து வைத்து, அதை பிரிட்ஜில் சேமித்து வைத்து சூடு செய்து சூடு செய்து கொடுப்பதாக கணவன்மார்கள் நிறைய பேர் பட்டிமன்றங்களில் வேடிக்கையாக பேசுவார்கள். இது சில வீடுகளில் நிஜமாகவே நடக்கிறதாம். அதிலும் காரக் குழம்பு, புளி குழம்பு என்றால் இன்னும் இரு நாட்கள் கூடுதலாக சேர்த்து வைத்துவிடுவதாகவு்ம அவர்கள் தெரிவித்திருந்தனர்.
பிரிட்ஜில் உணவு பொருட்கள் வைப்பது தவறு என்கிறார்கள். சாதம், சாம்பார், ரசம், பொரியல், இறைச்சி குழம்பு உள்ளிட்டவைகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. சமையலை தினமும் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் ஒரு 4 காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கவே கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி, சாதம் ஆகியவைதான் அந்த 4 பொருட்கள். வெங்காயத்தை பயன்படுத்தும் சிலர் வடைக்கு வெட்டிவிட்டு போதும் என்றால் வெட்டிய மீதியை பிரிட்ஜில் வைத்து வேறு எதற்காகவாவது போட்டுக் கொள்ளலாம் என நினைத்து வைப்பார்கள். ஆனால் அப்படி வெட்டிய வெங்காயத்தை வைத்தால் அது பிரிட்ஜில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி கெட்ட பாக்டீரியாக்களை அதிகப்படுத்தும்.
பூண்டு: பூண்டுகளை தோல் உரித்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து சிலர் பயன்படுத்துவார்கள். அது மிகவும் தவறு. பூண்டும் விரைவாக பூஞ்சை பிடிக்கக் கூடிய ஒரு பொருளாகும். எப்போதும் சமையல் செய்யும் போது உரித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உரித்து வெளியே வைத்திருக்க வேண்டும்.
இஞ்சி: இஞ்சியும் விரைந்து பூஞ்சை பிடிக்கும். இந்த இஞ்சி சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்புகளுடன் தொடர்புடையது. மேலும் தொண்டர் இருமலுக்கும் நல்லது. அப்படிப்பட்ட இஞ்சியை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.
அரிசி: சாதம் மாவுச்சத்தாக மாற கூடாது என்பதற்காக சிலர் அதை பிரிட்ஜில் வைத்து வருகிறார்கள். ஆனால் அரிசி வேகமாக பூஞ்சை பிடிக்கும். 24 மணி நேரத்திற்கு மேல் அரிசியை பிரிட்ஜில் வைக்கவே கூடாது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications