"உடலுறவு".. யாரிந்த பெண்.. காரில் சரிந்த நிர்வாண சடலம்.. கார் பார்க்கிங்கில் அக்கிரமம்.. என்னாச்சு
லண்டன்: காரில் உடலுறவு கொண்டபோதே நபர் ஒருவர் இறந்தநிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. என்ன நடந்தது?
பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில், செயல்பட்டு வரும் பிரபலமான மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. இந்த மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வருபவர் பெனலோப் வில்லியம்ஸ்.. 42 வயதான பெண், இந்த மருத்துவமனையில் சீனியர் நர்ஸும்கூட.
இந்த மருத்துவமனையின் பின்புறமுள்ள கார் பார்க்கிங்கில், நோயாளி ஒருவர் இறந்துகிடந்தார்.. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், சடலமாக கிடந்தார். அவரது இறப்பதற்கு இந்த நர்ஸ்தான் காரணம் என்று புகார்கள் கிளம்பியது. அதனால், போலீசாரும் இதற்கான விசாரணையை, நர்ஸிடம் நடத்தி வருகிறார்கள்..

வாக்குமூலம்: அப்போது, நர்ஸ் தன்னுடைய வாக்குமூலத்தில், "பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்தபடி, நோயாளியிடமிருந்து அவசரமாக ஒரு அழைப்பு வந்தது.. அதுவும் பேஸ்புக்கில் மெசேஜ் மூலமாக, தனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்.. அதனால் நான் அங்கு சென்றேன்.. அந்த காரின் பின்சீட்டில் நான் உட்கார்ந்தபடியே, நோயாளியுடன் 30 முதல் 45 நிமிடங்கள் வரை நேரம் பேசிக்கொண்டிருந்தேன்... அப்படி பேசிக்கொண்டிருந்தபோதுதான், நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்" என்றார்.
இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, நோயாளியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில், நோயாளி கடைசியாக உடலுறவில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.. இதற்கு பிறகுதான் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை நர்ஸிடம் துவங்கினர். வேறு வழியின்றி வசமாக சிக்கிக்கொண்ட நர்ஸ், நடந்த உண்மையை போலீசாரிடம் சொன்னார்.
உயிரிழந்து நோயாளி சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, அதற்காக டயாலிசிஸ் சிகிச்சையை இந்த மருத்துவமனையில் எடுத்து வந்தவராம்.. அப்படி டயாலிசிஸ் நோயாளி என்று தெரிந்தும்கூட, அவரிடம் இந்த நர்ஸ், சுமார் ஒரு வருட காலமாக பாலியல் உறவு வைத்திருந்தாராம்..
இந்த விஷயம் மருத்துவமனையில் சக பணியாளர்களுக்கும் தெரியவந்துள்ளது.. உடனே இந்த நர்ஸை அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அவரே ஒரு டயாலிசிஸ் நோயாளி.. அவரிடம் உறவு கொள்ள வேண்டாம்.. விபரீதமாகிவிடும் என்று சொன்னார்களாம். ஆனாலும், இந்த நர்ஸ் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை..
உடலுறவு: சம்பவத்தன்று காரின் பின் சீட்டில், நோயாளியுடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.. அப்போதுதான் நோயாளிக்கு மாரடைப்பு வந்துள்ளது.. ஆனால், நர்ஸ் அப்போதுகூட நோயாளியை காப்பாற்றாமல், தன்னை எப்படி தற்காத்து கொள்வது என்றே கவலைப்பட்டுள்ளார்.. நெஞ்சுவலியில் அவர் துடிக்கும்போது, ஆம்புலன்ஸைகூட அழைக்கவில்லையாம்.. அவசர உதவி எதையும் நாடவும் இல்லையாம்.. தன்னுடைய சக பணியாளரை மட்டும், உதவிக்கு கூப்பிட்டுள்ளார்..
அந்த பணியாளர் ஓடிவந்து நோயாளியை பார்த்துவிட்டு அதிர்ந்தே போனார்.. நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை அறிந்து, பயந்துபோன அந்த பணியாளர், எமர்ஜென்சிக்கு தகவல் தர சொன்னாராம்.. இவ்வளவும் நடந்து முடிப்பதற்குள், கடைசியில் அந்த நோயாளியின் உயிர் பரிதாபமாக பிரிந்தே விட்டது..
இதையடுத்து, தன்னுடைய வேலையின் நெறிமுறையிலிருந்து செவிலியர் தவறியதையும், இக்கட்டான சூழலில் ஆம்புலன்ஸை அழைக்காமல் அலட்சியடுத்தியதால் ஒரு செவிலியராக அவர் தோல்வியடைந்ததையும் விசாரணைக்குழு கண்டறிந்தது.
சஸ்பெண்டு: இப்போது, இது தொடர்பாக மேலும் சில உண்மைகளை போலீசார் விசாரணையில் வெளிப்படுத்தி உள்ளார்களாம். கார் பார்க்கிங் ஏரியாவில்தான் எப்போதுமே இந்த நர்ஸ் உடலுறவு கொள்வாராம்.. இறந்தபோது, நோயாளி ஆடையின்றி, நிர்வாணமாக கிடந்துள்ளார்.. இதையடுத்து, செவிலியர் பணிக்கு எதிராகவும், அதன் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவரை தற்போது பணிநீக்கம் செய்துள்ளது.
ஃபேஸ்புக்கில், இறந்த நோயாளி மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்பட்ட நிலையில், அதுகுறித்த தகவல்களையும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் நர்ஸ் குறித்த மேலும் தகவல்கள் பல வெளியாகும் என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications