துத்திக்கீரை.. மூலநோய்க்கு பெஸ்ட் கீரை.. ஆசனவாயில் ரத்தமா? மூலத்தை ஓட்டும் சூப்பர் பழங்கள், காய்கள்
சென்னை: மூலநோய் ஏன் வருகிறது? இதனை ஆரம்ப கட்டத்திலேயே தவிர்க்கலாமா? இதற்கு உதவக்கூடிய பழங்கள், காய்கறிகள் என்னென்ன? மூலநோயை விரட்டுவதில் துத்திக்கீரையின் பங்கு என்ன? என்பதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
மூலநோய் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. நீண்ட நாளாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் மூலநோய் வர வாய்ப்புள்ளது. ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பதாலும், அலர்ஜி உணவுகளை சாப்பிடுவதாலும், அதிக காரமான உணவை சாப்பிடுவதாலும், அதிகமாக பளு தூக்குவதாலும், நார்ச்சத்து இல்லாத உணவை சாப்பிடுவதாலும் மூலநோய்கள் வரலாம்.

எனினும், இதனை ஆரம்ப கட்டத்திலேயே , அதுவும் உணவு முறைகளிலேயே தடுக்கலாம். சரியான உணவு முறைகளையும், முறையான பழக்கவழக்கத்தையும் கையாண்டால், மூலநோய் வராமலேயே தடுத்துவிடலாம்.
பாதிப்புகள்: எனினும், மூலநோய் ஏற்பட்டு ரத்தக்கசிவு என்றாலே டாக்டரை சந்தித்து விட வேண்டும். கட்டாயம் சிகிச்சையும் பெற வேண்டும். மூலநோய் வராமல் தடுக்க, சில உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும.
முதலாவதாக, நார்ச்சத்து உணவுகள் அவசியம்.. மலம் கழிப்பதில் எந்த சிரமமும் இல்லாதவாறு, உணவுமுறைகள் இருந்தாலே போதும். எனவே, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதிக காரம் இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும்.. குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டு வரவேண்டும்.. உடல் சூட்டை தரக்கூடிய உணவுகளை தவிர்த்துவிடலாம்.
பருப்பு வகைகள்: உணவில், பருப்பு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும்.. இதனால், உணவு எளிதில் செரிமானமாகும்.. செரிமானத்துக்கு உதவக்கூடிய அரிசி, சோளம், ஓட்ஸ், பார்லி போன்றவற்றை தவிர்க்கவே கூடாது
பழங்களை பொறுத்தவரை, எலுமிச்சை, சாத்துக்குடி சப்போட்டா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகோடா, பப்பாளி பழம், பேரிக்காய், மாதுளை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த பழங்களிலேயேஆப்பிள் மிகவும் நல்லது. காரணம், பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கலை தடுக்கிறது.
காய்கறிகள்: காய்கறிகளை பொறுத்தவரை, தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, ப்ரக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட், புடலங்காய், கொத்தமல்லி போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிடலாம்.
கீரைகளில் வெந்தயக்கீரை, பசலைக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது. எந்த சமையலிலும், எண்ணெய், காரம், உப்பு இந்த மூன்றையும் அதிகமாக சேர்க்கக்கூடாது.
எண்ணெய் சேர்த்து சமைத்தாலும், விளக்கெண்ணெய்யில் சமைத்தால் குளிர்ச்சி கிடைக்கும். காபி, டீ போன்றவற்றை நிறுத்திவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் பழைய சாதம் தண்ணீரை கரைத்து குடிக்க வேண்டும். இந்த தண்ணீர் மூலத்துக்கு மிகச்சிறந்த மருந்தாகும். பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி, சின்ன வெங்காயம், கல் உப்பு போட்டு மூடி வைத்துவிட்டு, மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிப்பது, மூலநோயை விரைந்து குணமாக்கும்.
பழைய கஞ்சி: இந்த பழைய கஞ்சியை 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தாலே போதும். உடல் உஷ்ணம் குறையும்... மிகச்சிறந்த மலமிளக்கியாக இது செயல்படும்.. அல்சர் புண்களும் ஆறிவிடும். சிறுகுடலும் ஆரோக்கியம் அடையும்.. அன்றைய நாளுக்கு எனர்ஜி பானமாகவும் அமைந்து விடும்.
துத்திக்கீரையை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும். மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக இந்த கீரை திகழ்கிறது. அதனால், பலவகைகளில் இந்த கீரையை பயன்படுத்தி மூலத்தை விரட்டலாம். இந்த கீரையை பறித்து சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, தினமும் காலையில் ஒரு வாரத்துக்கு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தாலே போதும்.. மூலநோய் விரைந்து குணமாகும்..
மூலச்சூடு: ஒரு வாணலில் நல்லெண்ணெய், சீரகம், சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, அதில், துத்திக்கீரையையும் பொடியாக நறுக்கி போட்டு, மிளகுதூள், உப்பு தூள் சேர்த்து வதக்கி சாப்பிட்டாலும் மூலநோய் அண்டாது. அல்லது, இட்லி மாவுடன் இந்த கீரையையும் அரைத்து தோசை சுட்டு சாப்பிடலாம். துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடும் நீங்கும். அல்லது இந்த இலையை வெங்காயம், பச்சை பயறு சேர்த்து, வேக வைத்து கடைந்து சாப்பிட்டாலும் மூலச்சூடு தணியும்.
முழு தானியங்களான பழுப்பு அரிசி, ஓட்ஸ், தவிடு தானியங்கள், முழு தானியங்கள் அல்லது பல தானிய ரொட்டி ஆகியவை மூல நோய்க்கு நல்ல உணவுகளாகும்.. இந்த உணவுகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது மலத்தின் அளவை அதிகரிக்கிறது மற்றும் குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.. புரோக்கோலியை தவிர்க்க கூடாது. பிரவுன் ரைஸ், கம்பு, ஓட்ஸ், பயறு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications