முருங்கை பிசின்.. இயற்கையின் தங்க பஸ்பம்.. ஆண்மை கோளாறை போக்கும் முருங்கை பிசின் பொடி.. இதென்ன ஜெல்?
சென்னை: முருங்கை பிசின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முருங்கை பிசின் ஜெல் எப்படி தயாரிப்பது தெரியுமா?
முருங்கை மரத்திலிருந்து வெளிவரும் கெட்டிப்பொருளே முருங்கை பிசின்.. பிரவுன் நிறத்தில் இருக்கும், இந்த பிசின் நீர்த்தன்மையுடன் காணப்பட்டாலும், நாளடைவில் இறுகிவிடும்.. மரத்தின் பட்டைகளில் இந்த பிசின் காணப்படும்.

முருங்கை மரம்: முருங்கைமரத்திலுள்ள அதிகப்படியான கால்சியம் + சுண்ணாம்புச்சத்து + நார்ச்சத்து போன்றவை அனைத்துமே சேர்ந்து, மரத்திலிருந்து பசை போல வெளித்தள்ளுவதையே பிசின் என்கிறோம். தங்கபஸ்பத்திற்கு இணையான சத்துக்கள் நிறைந்த இந்த பிசினில், ஏகப்பட்ட சத்துக்கள், வேதிப்பொருள்கள், தாது உப்புகள் நிறைந்துள்ளன.
இந்த பிசின்கள் உடலுக்கு வலுவை தரக்கூடியவை.. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம் சத்துகள் உள்ளதால், பல்வேறு நோய்களை உடலில் குணமாக்குகிறது.
மூட்டு வலி: இந்த முருங்கை பிசினை உடைத்து, நெய்யில் வறுத்து பவுடர் செய்து வைத்து கொண்டு, மருந்தாக பயன்படுத்தலாம். இந்த பிசின்களால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.. மூட்டுவலி இருந்தாலும் சரியாகிவிடும்..
முருங்கை பிசின் பொடியை, இரவில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு ஸ்பூன் நெய்யில் லேசாக ஒரு நிமிடம் வறுத்து பிறகு அடுப்பை நிறுத்தி விட்டு, அதிலேயே ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காலையில் பிசின் தண்ணீரை வடி கட்டி குடிக்கலாம்.. அல்லது சூடான சாதத்தில் கூட ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடலாம். இதனால், உடலில் பலமில்லாதவர்களும் பலம் பெறுவார்கள்.
முருங்கை மரம்: தேவையான அளவு முருங்கைப் பிசினை நாட்டுமருந்து கடையில் வாங்கியோ அல்லது உங்கள் வீட்டின் அருகில் முருங்கை மரம் இருந்தால் அந்த மரத்திலுள்ள பிசினை எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில், அந்த முருங்கை பிசின் மீது உள்ள தூசிகளை நீக்கி கழுவி வைத்துக் கொள்ளவும். அதில் தண்ணீரை ஊற்றி முருங்கைப் பிசினையும் போட்டு ஊறவைத்துவிடவும்.
இரவு முழுவதும் முருங்கைப் பிசினை தண்ணீரில் ஊறியதுமே, அதே நீரில் நன்றாக உடைத்து கலக்கிவிட வேண்டும். இப்போது ஜெல்லி பதத்துக்கு பிசின் வந்துவிடும். இதில், இளஞ்சூடான பசும்பால் சேர்த்து கலந்து குடிக்கலாம்.. முருங்கைப் பிசினை எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் என்பார்கள்.
ஜெல்லி பதம்: ஆக, இந்த முருங்கை பிசின், உடலுக்கு வலுவை தரக்கூடியவை.. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம் சத்துகள் உள்ளதால், பல்வேறு நோய்களை உடலில் குணமாக்குகிறது. இந்த முருங்கை பிசினை உடைத்து, நெய்யில் வறுத்து பவுடர் செய்து வைத்து கொண்டு, மருந்தாக பயன்படுத்தலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications