தோசைக்கு அரைக்கறீங்களா? வெந்தயம் யூஸ் பண்றீங்களா? இட்லி மாவு பாக்கெட்டில் இதை கவனியுங்க.. முக்கியம்
சென்னை: இட்லி சத்தான உணவு.. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு.. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு.. எனினும் வெறும் அரிசியில் மாவு அரைத்து இட்லி வார்ப்பதைவிட, தானியங்களை பயன்படுத்தி இட்லி சாப்பிடும்போது, கூடுதல் சத்துக்கள் கிடைக்கின்றன.. இட்லி மாவு வீட்டில் அரைப்பதாகவே இருந்தாலும் அதனை 3 நாட்களுக்கு மேல் வைத்திருந்து பயன்படுத்த கூடாது.. ஏன் தெரியுமா? சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் எந்தெந்த வகைகளில் இட்லி சாப்பிடலாம்?
எண்ணெய், கொழுப்பு இல்லாமல், கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவாக இருப்பதாலும், ஆவியில் வேகவைத்து எடுப்பதாலும் இட்லி ஆபத்தான உணவாக கருதப்படுவதில்லை..

எனினும், கலோரி, மாவு சத்து நிறைந்திருப்பதால்தான், நீரிழிவு நோயாளிகளை இட்லி சாப்பிட வேண்டாம் என்றும் அரிசிக்கு பதிலாக ரவா, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை சேர்த்து இட்லி செய்து சாப்பிடவும் சொல்கிறார்கள.
பாசிப்பருப்பு எதற்காக
இதனால், இரும்புச்சத்து நிறைந்த உணவாக இட்லி மாறுகிறது.. ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜனேற்றம் உண்டாகும்.. ரவா இட்லி வார்ப்பதாக இருந்தால் கேரட் துருவி சேர்த்து கொள்ளலாம். அரிசி இட்லி என்றால் 2 இட்லிககு மேல சாப்பிடக்கூடாது.. ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி என்றால் 3 சாப்பிடலாம். இட்லிக்கு பெரும்பாலும் பாசிப்பருப்பு, சோம்பு சேர்த்து சாம்பார் சேர்த்து கொண்டால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.
அரிசியும் உளுந்தும் சேர்த்து அரைக்கும்போது, சிறிது பாசிப்பயறு சேர்த்து அரைத்தால் நன்மைகள் அதிகமாகும்.. ஏனென்றால், புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்B6, நியாசின், ஃபோலேட் போன்றவை பாசிப்பருப்பில் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஜீரண மண்டலத்தையும் பலமாக்குகிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால், உடல்சூடு, உடல் கழிவு வெளியேறும்.
மரவள்ளிக்கிழங்கு
பெரும்பாலும் பாக்கெட் மாவை தவிர்க்கலாம்.. ஏனெனில் சில பிராண்டுகளில் அரிசி மாவில் உளுந்து அளவை குறைத்து, மரவள்ளிக்கிழங்கின் கழிவுகளை சேர்த்துவிடுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.. அதுமட்டுமலல, மாவு புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிக்கேட் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறார்கள். இவ்வளவு கெமிக்கல்கள் இருப்பதால், ஒருநாளுக்கு மேல் பாக்கெட் மாவை வைத்து பயன்படுத்தக்கூடாது.
3 நாளைக்கு மேல் வேண்டாம்
வீட்டில் அரைத்த மாவு என்றாலும் 3 நாளைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.. இட்லி , தோசை மாவு நொதித்து வரும் தன்மையுடையது. அதில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும். மாவை ஒரு வாரத்துக்கு பயன்படுத்தும்போது, பாக்டீரியாக்கள் நச்சுக்களை உருவாக்குகிறது. அதேபோல, ஒரே பாத்திரத்தில் மாவை வைத்திருக்கும்போது பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்... பழைய மாவு நச்சாக மாறிவிடும்..
அதேபோல, இட்லி, தோசைக்கு அரைக்கும்போது வெந்தயம் சேர்த்து அரைக்கக்கூடும்.. 3 நாள் மாவு பயன்படுத்தினால், உடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். வாய்வு, வயிற்று அசௌகரியம் போன்ற செரிமான பிரச்சனைகள் உணடாகும். இதய நோய் உள்ளவர்களுக்கு இதை தரக்கூடாது.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications