Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டயாபடிஸ்ல ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாக இருக்குறதுனால உண்மையிலேயே என்ன நடக்குதுனு பார்ப்போம் . நம்ம உடலோட கட்டுமானத்துல அடிப்படையான அமைப்பு - செல்கள். இந்த செல்கள் ஒன்றிணைந்து திசுக்களாகுது.

Dr Farook Abdulla explains what happens when blood sugar level high

திசுக்களின் கோர்வை தான் உறுப்புகள், எலும்புகள், தசைகள் நரம்புகள்னு நம்ம உடல் உருவாகுது நாம எப்டி உயிர் வாழ மூச்சு விடுறோமோ அது போல நம்ம செல்களும் மூச்சு விடுகின்றன.. பொதுவாக ரத்தத்தில் சரியான அளவு க்ளூகோஸ் இருக்கும் போது கிடைக்கிற க்ளூகோஸைப் பிளந்து க்ளைகாலிசிஸ் மூலமா தனக்குரிய எரிபொருள உருவாக்கிக்குது.

இதன் இறுதிப் பொருளா பைருவேட்ங்குற பொருள் கிடைக்குது. இதை நமது செல்கள் மீண்டும் தனது எரிபொருள் தேவைக்கு உபயோகப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் அதுவே டயாபடிஸ் நோய் நிலையில் தேவைக்கும் மீறி க்ளூகோஸ் கிடைக்கும் போது அளவுக்கு மிஞ்சிய க்ளூகோஸ், நார்மல் வழில போகாம வேற ஒரு ரூட் எடுக்குது. இதன் விளைவாக அளவுக்கு அதிகமாக சார்பிட்டால் அப்படிங்கிற உயிர் வேதியியல் ரசாயனம் உருவாகுது.

இந்த சார்பிட்டால் நமது செல்களுக்குள் செல்ல இயலாது. எனவே மீண்டும் செல்களால் பயன்படுத்த இயலாது. கூடவே இந்த சார்பிட்டால் நொதிவினை காரணமாக ஃப்ரக்டோஸாக உருமாற்றம் அடைகிறது. இதனால் செல்களுக்குள் சவ்வூடு பரவல் அழுத்த நிலை ஏற்படுகிறது. இதனுடன் நில்லாமல் அளவுக்கு மிஞ்சிய க்ளூகோஸை சார்பிட்டாலாக உருமாற்றம் செய்யும் ஆல்டோஸ் ரிடக்டேஸ் நொதியின் விளைவால் உடலில் க்ளூடோதையான் அளவுகள் குறைகின்றன.

இதனால் ஊறு செய்யும் உயிர்வழித் தோன்றிகளின் அளவுகள் (REACTIVE OXYGEN SPECIES) கூடுகின்றன. இது செல்களுக்கு ஊறு விளைவிக்கின்றன. ஆல்டோஸ் ரிடக்டேஸ் நொதி நமது நரம்புகளின் செல்களிலும் ரத்த நாளங்களின் உட்புற சுவர்களிலும் உற்பத்தி ஆகின்றது. ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் தேவைக்கும் அதிகமாகும் போது இந்த நொதியானது அதிகமாக சுரக்கின்றது.

இன்னும் ரத்தத்தில் க்ளூகோஸ் அதிகமாக இருக்கும் போது சார்பிட்டால் மூலம் உருவான ஃப்ரக்டோஸ் -> 3 டீஆக்சி க்ளூகோசோனாகவும் க்ளைகாலிசிஸ் வழியில் தோன்றும் கிளிசரால்டிஹைடு 3 பாஸ்பேட் -> மெத்தில் க்ளைஆக்சாலாகவும் உருமாற்றம் அடைந்து செல்களில் சேருகின்றன.

இவற்றால் செல்களுக்கு அதிகமான ஊறு நேர்கிறது. இவை நரம்பு செல்களிலும் ரத்த நாளங்களின் உட்புற சுவர்களிலும் அதிக பாதிப்பை உண்டாக்குகின்றன. இதனாலேயே நமது ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக க்ளூகோஸ் இருக்கும் ஒவ்வொரு கணமும் நமது செல்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. டயாபடிசின் நீண்ட கால பாதிப்புகளான நீரிழிவினால் ஏற்படும் நெஃப்ரோபதி - சிறுநீரக பாதிப்பு, நியூரோபதி - நரம்பு மண்டல பாதிப்பு , ரெட்டினோபதி - கண் விழிப்படல பாதிப்பு, இதய ரத்த நாள பாதிப்பு, மூளை ரத்த நாள பாதிப்பு, மூளை தேய்மானம் என அனைத்தும் ஏற்படுகின்றன.

ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகளை கட்டுக்குள் வைப்பது என்பது நீரிழிவின் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளும் முக்கிய யுக்தியாகும் உணவில் மாவுச்சத்தை வெகுவாகக் குறைத்து உண்பது தேவையான புரதம் மற்றும் ஆரோக்கியம் தரும் கொழுப்புணவை உண்பது உடல் உழைப்பை அதிகப்படுத்துவது, மன அழுத்தம் குறைத்து நல்ல உறக்கம் காண்பது முறையான சரியான அறிவியல் ரீதியான மருத்துவம் செய்து சிகிச்சை பெறுவது நோயைத் தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவற்றால் ரத்த க்ளூகோஸ் அளவுகளை சரிவர பராமரித்து நீரிழிவை கட்டுக்குள் வைக்க முடியும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+