Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பாதிப்பு.. இலவச விழித்திரை பரிசோதனை.. வாஸன் கண் மருத்துவமனை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: சர்க்கரை நோயாளிகளின் வசதிக்காக நவம்பர் 30 ஆம் தேதி வரை அனைத்து சர்க்கரை நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச விழித்திரை பரிசோதனை செய்யப்படும் என மதுரை வாஸன் கண் மருத்துவமனை அறிவித்துள்ளது.

நீரிழிவு நோய் என்பது நமது இரத்தத்தில் உள்ள இரத்த சர்க்கரை பாதிப்பை குறிக்கிறது. சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டு தோறும் நவம்பர் 14ஆம் தேதி உலக நிரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகளால் நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று வறண்ட கண்கள் பாதிப்பு.

Eye damage in diabetic patients Vasan Eye Care Hospital announcement Free retinal examination

இந்த வறண்ட கண் பாதிப்பு என்பது ஒரு சிறிய பிரச்சினையாக தோன்றினாலும் இதை கண்டு கொள்ளாமல் விடுவது நாளடைவில் நிரந்தர கண் பாதிப்பு மற்றும் பார்வை இழப்பை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. கண் பார்வைக்கோளாறு உட்பட பல பிரச்னைகள் உண்டாக சர்க்கரை நோய் பிரதான காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் வாஸன் கண் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வுப் பேரணியில் மருத்துவர்கள் இதனைத் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக, வாஸன் கண் மருத்துவமனை மாபெரும் விழிப்புணர்வுப் பேரணியை மதுரை காளவாசலில் நடத்தியது. மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையர் டி.குமார் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். மேலும், சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.

வாஸன் கண் மருத்துவமனையின் தமிழ்நாடு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.கே.கமல்பாபு முன்னிலை வகித்து உரையாற்றினார். இப்போது சர்க்கரை நோயாளிகள் கண் பாதுகாப்பில் எவ்வாறு கவனமுடன் இருக்க வேண்டும்? மருத்துவமனையில் அவர்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய பரிசோதனைகள் சிகிச்சைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கமாக பேசினார்.

அப்போது பேசிய மருத்துவர்கள், "பெரும்பான்மையான கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயால் வரும் பார்வை இழப்பை தடுக்க சர்க்கரை நோயாளிகள் அனைவரும் தங்கள் கண்களை 6 மாதத்திற்கு ஒருமுறை 'கண் விழித்திரை' பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினர்.

சர்க்கரை நோயாளிகளின் வசதிக்காக நவம்பர் 30 ஆம் தேதி வரை அனைத்து சர்க்கரை நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் 'இலவச விழித்திரை பரிசோதனை' செய்யப்படும் எனவும் அறிவித்தனர்.

Eye damage in diabetic patients Vasan Eye Care Hospital announcement Free retinal examination

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் முனைவர். சு. கிருஷ்ணன், அண்ணா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு. அண்ணாதுரை, ஹெச்.எம்.எஸ்., மாநில துணைத்தலைவர் பாதர் வெள்ளை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மதுரை மண்டலத் தலைவர் ஏ.முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

அண்ணா அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள், மதுரை மற்றும் திருமங்கலம் ஆலம்பட்டி அன்னை பாத்திமா கல்லூரியின் மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.வாஸன் கண் மருத்துவமனை காளவாசல் கிளை மேலாளர் முத்துக்குமரவேல் வரவேற்புரையாற்றினார். பொதுமேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். மார்கெட்டிங் துறையின் தென்மண்டல தலைமை அதிகாரி விஜயன் பிரான்ஸிஸ் மற்றும் பணியாளர்கள் பேரணி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+