பழம்பாசி மூலிகை.. மூலநோய் முதல் மஞ்சள் காமாலை வரை விரட்டும் பழம் பாசி இலை.. பயனுள்ள பழம்பாசி வேர்கள்
சென்னை: ஊளைச்சதை முதல் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறைபாடுகள் களைவது வரை குணப்படுத்தக்கூடிய மூலிகைதான் பழம்பாசி.. நிலத்துத்தி என்று சொல்லக்கூடிய பழம்பாசி இலை, பழம்பாசி வேர்களின் மருத்துவ குணங்கள் என்னென்ன? இதனை எப்படி பயன்படுத்துவது?
வயல் நிலங்களில் காணப்படும் சின்னஞ்சிறிய செடியே, பழம்பாசி.. சிறிய இலைகளுடன் அடர் மஞ்சள் மலர்களின் மேல்புறம் முட்கள் போன்ற முடிகளுடன் காணப்படும். பழம்பாசி செடியின் வேர், பழம்பாசி இலை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

பழம்பாசி வேர்கள்: பழம்பாசி செடியின் வேர்கள் பெண்களுக்கு சிறந்த மருந்தாகும்.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது. இந்த வேர்களை லேகியமாக தயாரித்து, பிரசவ நேரத்தில் தருவார்களாம்.
பிரசவம் முடிந்தபிறகும்கூட இந்த வேர்களிலிருந்து கஷாயம் தயாரித்து பெண்களுக்கு தருவார்கள். மருத்துவ சாலைகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, மெடிக்கல் ஷாப்களில் இந்த கஷாயம் விற்கப்படுகிறது. சுகப்பிரசவம் நடப்பதற்கு இந்த லேகியம் தரப்படுகிறது.
மஞ்சள் காமாலை: பழம்பாசி வேர்களை, மஞ்சள் காமாலைக்கும் மருந்தாக தருவார்கள்.. நரம்புத்தளர்ச்சி, வலிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை பழம்பாசி வேர்கள் குணமாக்குகின்றன. ரத்தசோகை தொந்தரவு இருந்தாலும், இந்த வேர்களே மருந்தாகின்றன.
பழம்பாசி வேர்களிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.. விளக்கெண்ணை அல்லது நல்லெண்ணையில் இந்த பழம்பேசியின் வேர்களை சேர்த்து கொதிக்க வைப்பார்கள்.. இந்த எண்ணையை, ஆறாத புண்களில் தடவிவரும்போது, எப்பேர்ப்பட்ட ஆறாத புண்களும் விரைந்து ஆறிவிடும்.
பழம்பாசி இலைகள்: அதேபோல, பழம்பாசியின் இலைகளும் குளிர்ச்சி நிறைந்தவை.. உடல் உஷ்ணத்தில் ஏற்படும் தொந்தரவுகளை, இந்த இலைகள் விரட்டியடிக்கின்றன. பழம்பாசி இலைகளை தூளாக்கி, சீரகத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கலந்து, தினமும் 2 ஸ்பூன் மோரில் குடித்து வரும்போது, உடல் உஷ்ணம் மொத்தமும் இறங்கிவிடுமாம். சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு உள்ளிட்ட பிரச்சனைக்கும் இந்த பழம்பாசி பவுடரே போதும்.
வெள்ளைப்போக்கு அதிகமாக இருந்தால், பழம்பாசி இலைகளை சுத்தம் செய்து, சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து தினமும் காலையில் குடிக்கலாம். அதீத உடல் உஷ்ணத்தினால், கருத்தரிக்க முடியாமல் போனாலும், பெண்கள் இதனை குடித்து வரும்போது, நல்ல பலன்கிடைக்குமாம்.
மூலச்சூடு: மூல தொந்தரவு உள்ளவர்கள், பழம்பாசி இலைகளை நன்றாக கழுவி, பாலில் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, சிறிது எலுமிச்சம் சாறு, தேன் கலந்து தினமும் 2 வேளை குடிக்கலாம். உடல் சூடு அதிகமாக இருந்தால், பழம்பாசி இலைகளை விழுதாக அரைத்து, தலையில் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சி பெறுவதுடன், சருமத்திலுள்ள சொறி, சிரங்கு, வேர்க்குரு, கட்டிகளும் நீங்கும்.
பழம்பாசியை காயவைத்து இடித்து பவுடராக்கி தினமும் மோரில் கலந்து 2 வேளை குடித்து வரும்போது, ஊளைச்சதைகள் கரைவதுடன், நரம்புத்தளர்ச்சி தொந்தரவு இருந்தாலும் விலகிவிடும்.
பழம்பாசி செடியின் காய்களும், பழங்களும் பல் வலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பற்களில் பூச்சி விழுந்தவர்கள், பல் வலியால் அவதிப்படுபவர்கள், வலி உள்ள பல்லில் இந்த பழத்தை நன்றாக வைத்து அழுத்தவேண்டும். இந்த பழத்தையும், காய்களையும் நன்றாக கடிப்பதின் மூலம் மிகவும் கசப்பு வாய்ந்த அந்தச் சாறு பல்லினுள் இறங்கி பூச்சியை கொன்றுவிடும். அத்துடன் பல் வலியையும் குணப்படுத்தும் என்கிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications