கல்லீரல் காவலன்.. வெறும் "இந்த பொடி" போதும்.. உடல் எடை மின்னல் வேகத்தில் குறையுமாம்.. ஆச்சரிய மூலிகை
சென்னை: அன்றும்சரி, இன்றும்சரி, வைத்திய முறைகளில் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது திரிபலா.. இதிலுள்ள பலன்களை பெறுவதற்காகவே, நம்முடைய முன்னோர்கள், தங்கள் வீடுகளில் கட்டாயம் வைத்திருந்த மூலிகை பொடிதான் திரிபலா.
நெல்லிக்காய் + கடுக்காய் + தான்றிக்காய் இது மூன்றும் சேர்ந்த பொடிதான் திரிபலா.. எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் பொடியாகும்..

நெல்லிக்காய்: சிலர் இதை வீட்டிலேயே தயார் செய்வார்கள்.. கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் 4 பங்கு, தான்றிக்காய் 2 பங்கு எடுத்து, நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து கொண்டால், திரிபலா பொடி தயார். பெரும்பாலும் இரவில்தான் இந்த பொடியை 5 கிராம் அளவுடன் சாப்பிடுவார்கள். இதனால் ஏற்படும் நன்மைகளை லிஸ்ட் போட்டு சொல்லிவிட முடியாது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதிலுள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி முதுமையை தள்ளி போடுகிறது இந்த பொடி.. குடலை சுத்தம் செய்கிறது.. நன்றாக செரிமானம் நடக்கிறது.. மலச்சிக்கலை தீர்க்கிறது. வயிற்றில் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது.. இதனால் வயிற்றுப்புண்ணும் ஆறுகிறது.. அல்சரையும் தடுத்து நிறுத்துகிறது.
இதய சுத்திகரிப்பு: இதயத்தை காக்கிறது.. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்து, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.. இதனால் அனிமிக் பிரச்சனையையும் தீர்க்கிறது.
இந்த பொடியை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பார்கள்.. அதாவது ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தை சேர்த்து மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை, 2 டம்ளர் நீரை, ஒரு டம்பர் வரும்வரை சுண்டகாய்ச்சி, தேன் கலந்து குடித்தால் பலன் தரும். இதனால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.. தேவையற்ற சதைகளும் கரைய தொடங்கும்.. தேவையற்ற கிருமிகளும் அழியும்..
சர்க்கரை: சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதில் திரிபலா பெரும்பங்கு வகிக்கிறது. திரிபலாவிலுள்ள கசப்பு தன்மையானது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை இந்த பொடி குறைக்கிறது.. கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. எனவே, மருத்துவர் அனுமதியுடன் இந்த பொடியை பயன்படுத்தலாம்.. மழைக்காலங்களில் சுடுநீரிலும், குளிர் காலங்களில் நெய்யுடனும், பனிக்காலங்களில் தேனுடனும், கோடை காலத்தில் நீருடன் கலந்து இந்த பொடியை சாப்பிட வேண்டும்.
சூரணம்: இந்த சூரணத்துடன், கிராம்பு + கல் உப்பு சேர்த்து பல்பொடியாக உபயோகித்தால், ஈரல் வலுப்படும்.. வாய் துர்நாற்றம் நீங்கும்.. மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு இருந்தால், பெண்கள் இந்த பொடியை பயன்படுத்தலாம். ஆனால், கர்ப்பிணிகள் டாக்டரின் அறிவுரை இல்லாமல் இதை சாப்பிடக்கூடாது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications