Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுகர் ஏறாமல் இருக்க உதவும் சூப்பர் டீ.. சர்க்கரை நோயாளிக்கு உதவும் அற்புத மூலிகைகள்.. பயனுள்ள இலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க இயற்கையான எத்தனையோ மூலிகைகள் நமக்கு கைகொடுத்து உதவுகின்றன. பக்கவிளைவுகள் இல்லாத இந்த இலைகளை சமையலில் பயன்படுத்தி வருவதால், நீரிழிவு நோயின் ஆபத்துகளும் குறைய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

இன்று உலகையே மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவது நீரிழிவு நோயாகும்.. NCBI-ன் அறிக்கையின்படி, உலகின் மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்... உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட சுமார் 422 மில்லியன் மக்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம்.

diabetics

சர்க்கரை நோய்: தற்சமயம் சுமார் 8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. நம்முடைய இந்தியாவிலும் சர்க்கரை நோய் கலக்கத்தை தந்து வருகிறது. வரும் 2045ம் ஆண்டில், நம்முடைய நாட்டில் 13 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதே நீரிழிவு நோயாகும். இது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.. கணையத்தில் இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவது தான் நீரிழிவு நோய் என்கிறோம். இதனால், இதயம், சிறுநீரகம், கண், ரத்த நாளங்கள், எலும்புகள் போன்றவைகளுக்கு பாதிப்புகள் வருகின்றன. எனவே, சர்க்கரையை எப்போதுமே கட்டுக்குள் வைக்க, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று வர வேண்டும்.

மூலிகைகள்: அதேசமயம், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிப்பதில், இயற்கை மூலிகைகளுக்கும் நிறைய பங்குள்ளன.. மருத்துவ குணம் நிறைந்த சிலஇலைகளை மருந்தாக சாப்பிடுவதன் மூலம், சர்க்கரையும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

உதாரணத்துக்கு சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதில் கற்றாழைகளும் பயன்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள NCBI (National Center for Biotechnology Information) என்ற ஆய்வில் கற்றாழையில் ஹைப்போகிளேசமிக் பண்பு இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். எனவே, கற்றாழை இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.

கொய்யா இலைகள்: இதில் கொய்யாப்பழம் இலைகள், சீதாப்பழம் இலைகளையும் சேர்த்து கொள்ளலாம். இவைகள் கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்வதுடன், ரத்த சர்க்கரையையும் குறைக்கிறது. கொய்யா இலைகளில் ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ரசாயனங்கள் உள்ளன.. இவை நீரிழிவு எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கின்றன. எனவே, கொய்ய இலைகளில் டீ தயாரித்து குடிக்கலாம்.

அதேபோல, தெய்வீக மூலிகை என்று சொல்லக்கூடிய மருந்தினை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம். வேப்பிலை, வில்வம், அத்தி இலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழா நெல்லி, மாவிலை, வெற்றிலை, தும்பை இந்த இலைகள் எல்லாவற்றையும் சமமாக எடுத்து, நிழலில் உலர்த்தி இடித்து, தூள் செய்து, ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கட்டுக்குள் வரும்: தினமும் உணவுக்கு முன்பாக கால் டீஸ்பூன் அளவு இதை எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.. இப்படி 3 வேளை உணவுகள் எடுப்பதற்கு முன்பும் இந்த பவுடரை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள். எனினும், இந்த மருந்தை டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெறாமல் சாப்பிடக்கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+