Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இத்தனை நாளா சாப்பிட்டது இதையா? மாரடைப்பு அதிகரிக்க இதுவா காரணம்..அதிர்ச்சி ரிப்போர்ட்

இருதய மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட ஜீரோ கலோரி சர்க்கரையான எரித்ரிட்டால் காரணம் என புதிய ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இருதய மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட ஜீரோ கலோரி சர்க்கரையான எரித்ரிட்டால் காரணம் என புதிய ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

எரித்ரிட்டால் என்பது மிட்டாய், சூயிங் கம், சாக்லேட், பானங்கள், தயிர், ஃபில்லிங்ஸ், ஜெல்லிகள், பார்கள் மற்றும் ஜாம்கள் போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் சர்க்கரை மாற்றாகும். பேக்கிங் மற்றும் வீட்டுச் சமையலுக்கு ஸ்வீட்னர் சிறுமணி மற்றும் தூள் வடிவத்திலும் கிடைக்கிறது.
எரித்ரிட்டாலை தெளிவான தமிழில் சொல்வது என்றால் ஒரு சர்க்கரை ஆல்கஹால் ஆகும்.

இது நாம் வழக்கமாக சாப்பிடும் சர்க்கரைக்கு மாற்றாக தற்போது இளம் வயதினரால் பயன்படுத்தப்படுகிறது. இந்த எரித்ரிட்டால் பயன்படுத்தி தான் ஸ்டீவியா, மாங்க்ஃப்ரூட் மற்றும் கெட்டோ போன்ற ஆன்லைன் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஜீரோ கலோரி கொண்ட இந்த எரித்ரிட்டால் தான் இப்போது அதிகமாகி வரும் இரத்த உறைவு, பக்கவாதம், மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளுக்கு காரணமாக இருக்கிறதாம்.

எப்படி பயன்

எப்படி பயன்

எரித்ரிட்டால் தற்போது பயன்படுத்தப்படும் வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் முயற்சிக்கும் மக்களுக்கு ஆர்வமாக உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஜீரோ கலோரி கொண்ட செயற்கை சர்க்கரை தான் எரித்ரிட்டால் ஆகும். இந்த செயற்கை சர்க்கரையை சாப்பிட்டால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உயர்த்தாது, மேலும் கரியோஜெனிக் அல்ல. ஒரு சர்க்கரை மாற்றாக, இது மிகவும் நன்றாக வேலை செய்கிறது - இது வாயில் ஒரு இனிமையான உணர்வை அளிக்கும்.

இனிப்பு தயாரிப்பு

இனிப்பு தயாரிப்பு

இது எப்படி கிடைக்கிறது. திராட்சை, பேரிக்காய், முலாம்பழம், காளான்கள் போன்ற உணவுகளிலும், ஒயின் மற்றும் சோயா சாஸ் போன்ற சில புளித்த உணவுகளிலும் இயற்கையாகவே காணப்படுகிறது. சோளம் அல்லது கோதுமை மாவுச்சத்திலிருந்து குளுக்கோஸுடன் ஈஸ்ட் புளிக்கவைப்பதன் மூலம் இனிப்பு தயாரிக்கப்படுகிறது.

உடல் கோளாறு

உடல் கோளாறு

ஆன்லைனில் கிடைக்கும் சர்க்கரை ஆல்கஹால் இனிப்பான Erythritol இனிப்புகள் ஒவ்வொன்றும் கலோரிகளில் மிகக் குறைவு மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. எரித்ரிட்டால் கிட்டத்தட்ட பூஜ்ஜிய கலோரிகள், பூஜ்ஜிய கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பூஜ்ஜிய கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, அதனால்தான் குறைந்த கார்ப் அல்லது குறைந்த சர்க்கரை உணவில் பலர் இந்த இனிப்பைப் பயன்படுத்துகின்றனர். எரித்ரிட்டால் மற்ற சர்க்கரை ஆல்கஹால்களுடன் ஒப்பிடும்போது குறைவான குடல் கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும், பற்சிதைவை தடுப்பதாகவும் கூறப்பட்டது.

டாக்டர் விளக்கம்

டாக்டர் விளக்கம்

இந்நிலையில் எரித்ரிட்டால் என்கிற இந்த சர்க்கரை ஆல்கஹால் தான், மாரடைப்பு வருவதற்கு மிகஅதிகமான வாய்ப்பாக உள்ளதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கிளீவ்லேண்ட் கிளினிக் லெர்னர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் கார்டியோவாஸ்குலர் நோயறிதல் மற்றும் தடுப்பு மையம் செயல்படுகிறது. இயக்குனர் டாக்டர் ஸ்டான்லி ஹேசன் கூறும் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்தின் அளவு மிதமானதாக இல்லை என்றும் மிக அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.

வாய்ப்பு அதிகம்

வாய்ப்பு அதிகம்

நேச்சர் மெடிசின் இதழில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வின்படி, நீரிழிவு போன்ற இதய நோய்க்கான ஆபத்து காரணிகளைக் கொண்டவர்கள், தங்கள் இரத்தத்தில் அதிக அளவு எரித்ரிட்டால் இருந்தால், மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை அனுபவிக்கும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய நோய்

இதய நோய்

உடல் பருமன் மற்றும் இதய நோய் போன்ற நிலைமைகள் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க செயற்கை இனிப்புகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், தொற்றுநோயியல் ஆய்வுகள் இந்த செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கும் அவற்றால் என்ன நன்மை நமக்கு கிடைத்தது என்பதையும் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்படி செய்த ஆய்வில் தான் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

கூடுதல் ஆய்வு

கூடுதல் ஆய்வு

இதனிடையே இந்த கருத்தை சில மருத்துவர்கள் முழுமையாக ஏற்கவும் இல்லை. ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டி வெக்ஸ்னர் மெடிக்கல் சென்டரில் பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணரும், மருத்துவ உணவுமுறையின் பயிற்சி பயிற்றுவிப்பாளருமான லிஸ் வெய்னாண்டி, நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், எரித்ரிட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வுகள் உண்மையில் நிரூபிக்கவில்லை. ஆய்வுக்கும் நிஜத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆய்வில் சொல்லப்படுவது போல் மனிதர்களுக்கு அதே மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அர்த்தமல்ல. எரித்ரிட்டால் என்பது மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு கூடுதல் ஆய்வு தேவை என்றார்.

ஆபத்து எப்படி

ஆபத்து எப்படி

எரித்ரிட்டால் என்று அழைக்கப்படும் சர்க்கரை ஆல்கஹால், இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கிறது. இருப்பினும் செயற்கையாக இனிப்பான எரித்ரிட்டாலால் செய்யப்பட்ட உணவுகளில் உட்கொள்ளப்படுவதை விட மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. இந்த உணவுகளை சாப்பிடும் போது மனித உடல் அதை வளர்சிதைமாற்றம் செய்வதற்கு கடினமாக வேலையைச் செய்கிறது, அதனால் அதிகப்படியான இரத்த ஓட்டத்தில் வெளியேற்றப்படுகிறது. இந்த ஆய்வின் ஆசிரியர்கள் கூற்றுப்படி அதிகப்படியான எரித்ரிட்டால் தான் மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

எந்தபிரச்சனையும் இல்லை

எந்தபிரச்சனையும் இல்லை

திராட்சை, தர்பூசணி, காளான்கள் மற்றும் ஒயின், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் உள்ளிட்ட உணவுகளில் காணப்படும் எரித்ரிட்டால், இயற்கையாக நிகழும் எரித்ரிட்டால் ஆகும். எனவே இந்த உணவுகளை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை திட்டத்தில் திட்ட இயக்குநர் சமந்தா கூகன் வலியுறுத்தினார். செயற்கை எரித்ரிட்டால் பெரும்பாலும் சூயிங் கம் மற்றும் ப்ளூ ஸ்கை போன்ற ஜீரோ-சர்க்கரை சோடாக்களில் காணப்படுகிறது என்றும கூகன் கூறினார். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளில எரித்ரிட்டால் சேர்க்கப்படுகிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+