அண்ணே ரெண்டு பீரு கூலிங்கா! கோடை காலத்தில் பீர் குடிக்கலாமா? ’இந்த’ உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
சென்னை: கோடைக் காலத்தில் பீர் குடிப்பது குளுமைப்படுத்தும் என நம்புவது முட்டாள்தனமான விஷயம் எனவும், கோடையில் மது, சிகரெட்டை 100 சதவீதம் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் அது மரணம் வரை கொண்டு செல்லும் எனவும் கூறுகின்றனர்.
தற்போது கோடை வெயில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து தேவைக்கும் குறைவாகவே பீர் பாட்டில்கள் விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மது பிரியர்கள், பீர் பாட்டில் கேட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணியாளர்களுக்கு மதுப் பிரியர்களுக்கும் சண்டை கூட வருவதுண்டு..
வெயிலுக்கு பீர்: இந்த நிலையில் வெயிலுக்கு ஆல்கஹால் மற்றும் சிகரெட் பேராபத்து என மருத்துவர் சிவராமன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,”சிகரெட் ஆல்கஹால் வெயில் காலங்களில் பேராபத்து இரண்டும் உடலுக்கு வெம்மையை தரக்கூடியது உடல் சூட்டை அதிகரிக்க கூடியவை. ஆல்கஹால் சிகரெட் இரண்டுமே உடலை சூடுபடுத்தக் கூடியவை. தற்போது கோடைக்காலத்தில் அவற்றை பயன்படுத்தும் போது பெரும் கேட்டை ஏற்படுத்தும்.
பிரச்சினைகள்: மேலும் ஈரல் குடல் கல்லீரல் ஆகியவற்றை புண்ணாக்கும் தன்மையை ஏற்படுத்தும். 100% சமூகத்தில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒதுக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்று பார்க்கும்போது மது, புகை மற்றும் புகையிலை ஆகியவை இருக்கின்றன. கோடை காலம் குளிர் காலம் என்று இல்லாமல் எப்போதுமே அவற்றை விட்டு விலகி இருப்பது நல்லது. கோடை காலத்தில் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிலர் பீர் குடித்து வருகின்றனர்.

ஆல்கஹால்: கோடைக் காலத்தில் பீர் குடிப்பது குளுமைப்படுத்தும் என நம்புவது முட்டாள்தனமான விஷயம். சிறுநீர் அதிகமாக வெளியேறும் என்பதால் பீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும் என நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. உடலில் உள்ள நீரை அதிக அளவில் வெளியேற்றுவது பீர், சிறுநீரை உருவாக்கும் என்றாலும் அதிலும் ஆறு சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கிறது. அந்த ஆல்கஹால் ஈரலை பாதிக்கும்.
தொடவே கூடாது: ஈரலை பாதித்து அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதால் அது நன்மை என நினைப்பது மிகவும் முட்டாள்தனமானது. 100 சதவீதம் ஆல்கஹால் ஒதுக்கப்பட வேண்டும் அதுவும் கோடைகாலத்தில் அதனை தொடவே கூடாது என எச்சரித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் வெயில் நேரங்களில் மது குடிப்பது உடலில் உள்ள நீரை வியர்வை மூலம்வெளியேற்றி நீர் இழப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டு மரணம் வரை இட்டுச் செல்லும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications